கண்ணூர், ஏப்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் பலத்தை சுயேச்சையாக வலுப்படுத்து வோம் என்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு புதனன்று (ஏப்ரல் 6) தொடங்கி சனியன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8 (வெள்ளியன்று) அரசியல் ஸ்தாபன நகல் அறிக்கையை மாநாட்டில் மத்தி யக் குழுவின் சார்பில் நான் (பிரகாஷ்காரத்) முன்வைத்து பேசினேன். இன்று பிற்பகல் வரை அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் 15 பேர் பேசியிருக்கிறார்கள். இன்று இரவு அதன் மீதான விவாதம் முடியும். இந்த நகல் தீர்மா னத்தின் மீது பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக் களுக்கு நாளை (ஞாயிறு) ஏப்ரல் 10 அன்று பதிலளித்த பின்னர் நிறைவேற்றப்படும். கட்சியின் கடந்த மாநாட்டிற்கு பிறகு செய்த பணிகளை பரிசீலனை செய்வது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகும். அமைப்பு ரீதியாக எதிர்காலக் கடமைகளை மேலும் சிறப்பாகச் செய்து முடிக்கவும். எதிர்கால அரசியலுக்கான வழிகாட்டுதல்களை தீர்மானிக்கவும் இந்த தீர்மானம் உதவும்.
இதனடிப்படையில் கடந்த நான்கு ஆண்டு களில் கட்சி மேற்கொண்ட பணிகள் தொடர்பாக வும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர் பாகவும் சுயவிமர்சன அடிப்படையில் விவா தங்கள் நடைபெற்றன. பணிகளில் ஏற்பட்டுள்ள பலம் மற்றும் பலவீனங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் இதனுடன் பரிசீலனைக்கு உட்படுத்தினோம். கட்சி மாநாட்டில் மேற்கொள் ளப்படும் இது போன்ற நடைமுறைகள் வருங்காலத்தின் சவால்களை வெற்றிகரமாக சந்திக்க உதவும்.
கோவிட்
கடந்த 4 ஆண்டுகள் சாதாரண காலம் அல்ல. இரண்டு ஆண்டுகள் கோவிட் பெருந்தொ றறால் அமைப்புகளின் செயல்பாடுகளை முழு வீச்சுடன் முன்னெடுக்க முடியவில்லை. அதில் தடை ஏற்பட்டது. கோவிட் பெருந்தொற்று ஏற்படு வதற்கு முன்பு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மிகத்தீவிரமான போராட்டங்கள் நடை பெற்றன. அதில் எங்களது கட்சி தீவிரமாக பங்கேற்றதோடு, பெருமளவிலான மக்களையும் அணி திரட்டியது. கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் நடை பெற்ற மற்றொரு மிகப்பெரிய போராட்டம் வர லாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் விவசாயி களின் போராட்டம் ஆகும். தலைநகர் தில்லியை நோக்கி செல்லும் 5 சாலைகளில் விவசாயிகள் மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்தி னர். பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டக் களத்தில் முன்நின்றனர்.
எங்கள் கட்சி பெரிய சக்தியாக இல்லை என்றாலும் மற்றவர்களை அணி திரட்டுவதி லும், விவசாய இயக்கங்களை ஒருங்கிணைப்ப திலும் மிகப்பெரிய கடமையை செய்தோம். பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்களது கட்சி யினர் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். மக்க ளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியதோடு, நிவாரண மையங்களையும் ஏற்படுத்தினர். பல இடங்களில் தீவிரமாக பாதிக் கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆக்சி ஜன் சிலிண்டர்களையும் வழங்கினார்கள். மேற்கு வங்கத்தில் 10 ஆயிரம் செந்தொண்டர்கள் நிவா ரணப்பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்தும் மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. பெருந்தொற்றுக் காலத்தில் அரசியல் செயல் பாடுகளை மேற்கொள்வதில் தடை இருந்ததா லும் பொதுமுடக்கம் காரணமாகவும் எங்களது வழக்கமான அரசியல் ஸ்தாபன பணிகளில் தடை ஏற்பட்டது. இதனால் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டது. 2020-21ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையில் கணிசமான சரிவு இருந்தது. இருப்பினும் தற்போது படிப்படியாக முன்றனேற்றம் ஏற்பட்டு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அம லாக்குவதில் அரசியல் தலைமைக்குழு மட்டத்தில் பலவீனம் இருந்ததை நகல் தீர்மானம் சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சுயேச்சையாக வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கக்கூடிய மேற்குவங்கம், திரிபுரா மற்றும் கேரள மாநிலங்களில் பல்வேறு சவால்களை கடந்த 4 ஆண்டுகளில் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கடுந் தாக்குதலில் கடந்த 4 ஆண்டுகளில் 36 தோழர்கள் கொல்லப்பட்டிருக் கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி ஊழியர்கள் நாள்தோறும் தாக்கு தலுக்கு ஆளாகி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல, சமீபத்தில் முடிவடைந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்க் கட்சிகள் வேட்புமனுக்களை கூட தாக்கல் செய்ய ஆளும் கட்சியினர் அனுமதிக்காமல் மிகப்பெரிய அராஜகத்தில் ஈடுபட்டனர். திரிபுராவை பொறுத்தவரை அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் தாக்குதலை எங்களது கட்சியினர் எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த இரு மாநிலங்களில் அமைப்பு ரீதியாக எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும் இதிலிருந்து கேரளா விதிவிலக்காக உள்ளது. அரசியல் ஸ்தாபன அறிக்கை மீதான விவாதம் முடிந்த பின்னர் கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துதல், உறுப்பினர்களின், இளைஞர்களின், பெண்களின் விகி தாச்சாரத்தை அதிகரித்தல் குறித்து தீவிரமான செயல்பாடுகளில் இறங்க இருக்கிறோம். இதில் கடந்த சில ஆண்டுகளாக சில மாநிலங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இதர மாநிலங்களில் மேலும் முன்னேற் றத்தை காண வேண்டியுள்ளது. பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பாஜகவை தத்து வார்த்த ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கேற்ப எங்களது கட்சியிலும் உறுப்பி னர்களை தயார்ப்படுத்த வேண்டி யுள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் கவனக் குறைவாக செயல்பட்டால் பாஜகவின் வளர்ச்சிக்கு ஈடாக கடும் போட்டியை நம்மால் தர முடியாது என்பதையும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மாநாட்டின் நான்காவது நாளான சனிக்கிழமை கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசின் சாதனைகளை அங்கீக ரிக்கும் வகையிலும்,அந்த அரசு கடைப்பிடிக்கும் மாற்றுக் கொள்கை களை நாடுமுழுவதும் எடுத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளோம். இதுகுறித்த தீர்மானம் ஒன்றும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மேற்கு வங்க மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சூர்யகாந்த மிஸ்ரா முன்மொழிந்தார். இதனை மற்றொரு அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஜி.ராமகிருஷ்ணன் வழிமொழிந்தார். வேலையின்மைக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வகை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தேர்தல் தோல்விகள் கட்சியின் அரசியல் செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதன் அர்த்தமல்ல. தேர்தலுக்குப் பிறகு பல ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் கோவிட் நிவாரணப் பணிகளில் இறங்கினர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் ஒரே குணாம்சத்தை கொண்டவர்கள் தான், இருவரை சம அளவிலேயே எதிர்க்கிறோம், ம.பி, உ.பி, உள்ளிட்ட வட மாநிலங் களில் ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத அரசியலை புரிந்து கொள்ள முடியாத பிரச்சனையால் மக்கள் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், ஆர்எஸ்எஸ் ஸின் வகுப்பு வாத அபாயத்தின் அனுபவங்களை அவர்கள் உணர வில்லை.
இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது இந்து நம்பிக்கையை எதிர்ப்பது என்று பொருளல்ல. இந்துத்துவம் என்பது ஆர்எஸ்எஸ் முன்வைத்துள்ள அரசியல் திட்டம், பெரும்பான்மை இந்து மதத்தின் பெயரால் அரசை நிறுவுவது சிறு பான்மை மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்றுவது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற தத்துவத்தை முன்னிறுத்து கிறது, ஆகவே தான் நாங்கள் இந்துத்துவாவை எதிர்க்கிறோம். மாநிலங்களுக்கிடையேயோன அரசு மொழியாக இந்தியை பயன் படுத்துவதையே நாங்கள் எதிர்த்து வருகிறோம், தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருபடி மேலே போய் மக்களுக்கு இடையே பேசும் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்கிறார், இது ஆபத்தானது. பல மொழி பேசும் இந்தியாவில் இந்தி திணிப்பு கூடாது. எட்டாவது பட்டியலில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகளாக இருக்க வேண்டும் என்று கூறினார்.