tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம்!

சென்னை: உலக குழந்தைத் தொழிலாளர் முறை  எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குழந்தைகளை  வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், “குழந்தைகளே நம் நாட்டின் செல்வம், கல்வியே  குழந்தைகளுக்கு நிரந்தர செல்வம் என்றும் தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்து உள்ளார்.

பாஜகவின் இருட்டடிப்பு: வைகோ கண்டனம்

சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடா மல் பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ் ணன் தயாரித்த 982 பக்க அறிக்கை, கீழடி பகுதி கி.மு.  800-இல் குடியிருப்பு பகுதியாக இருந்ததை உறுதிப்படுத்து கிறது. ஆனால் இந்திய தொல்லியல் துறை அறிக்கையை மறுசீரமைக்க உத்தரவிட்டுள்ளது. “ஒன்றிய பாஜக அரசு தமிழ் மக்களின் தாய்மடியில் கீழடியை கருவறுக்கும் வேலைகளை செய்கிறது. சமஸ்கிருத பண்பாட்டை நிறுவ தமிழரின் தொன்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முய லுகிறது” என்று வைகோ கண்டித்துள்ளார்.  

ஒன்றிய அமைச்சர் வன்மம்  

சென்னை: தமிழர் தொன்மை வரலாற்றையும், மதச் சார்பற்ற மரபையும் ஏற்க மறுத்து வன்மத்துடன் ஒன்றிய  அமைச்சர் கஜேந்திர சிங் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கடும்  கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் நடந்து  வரும் அகழாய்வும், ஆராய்ச்சியும் தமிழர்களின் வரலாறு,  பண்பாடு, கலாச்சார மரபுகள் தொன்மை சிறப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இவை அனைத் தும் அறிவியல் சோதனை மூலம் உறுதியும் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆதிக்க வர்க்கம் பதற்றமடைந்து வரு கிறது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 6 மதுரையில் மமக மாநாடு

சென்னை: இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும், வக்பு திருத்த சட்டத்தை  திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 2 கோரிக்கை களை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜூலை  6 அன்று மதுரையில் பேரணி, மாநாடு நடைபெறும் என அக்கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறி வித்துள்ளார்.  

பள்ளி மாணவிக்கு கொடூரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட 4 பேரி டம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

ஆதார் கட்டாயம்

சென்னை: “ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை பெற  ஆதார் எண் கட்டாயம் என்றும் ஆதார் அட்டை பெற்ற பய னர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய  முடியும். அதுவும் ஐஆர்சிடிசி செயலி மூலம் ஆதார் அங்கீ கரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடி யும்” என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.