tamilnadu

img

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் புதிய திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி

சென்னை, பிப். 20- மண்ணுயிர் காத்து மன்னு யிர் காப்போம் என்ற புதிய திட்டம்  ரூ.206 கோடி நிதியில் செயல் படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். “மண்வளத்தை பேணிக்காக்க வும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப் படுத்தவும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். ரசாயன உரங்களின் பயன்பாட் டைக் குறைத்து மண்ணின் வளம்  காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய்  ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக் கீடு செய்யப்படும்.வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகை யில், 10 லட்சம் வேப்ப மரக்கன்று கள் வேளாண்  காடுகள் திட்டத்தில்  இலவசமாக விநியோகம் செய்யப்படும். இதற்கென ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்படும். வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப் பட்டு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க ரூ.38 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்படும். 2024-25ஆம் ஆண்டில் 14,000 ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும். 10  உழவர் அங்காடிகள் ரூ. 5 கோடி  மாநில நிதியில் செயல் படுத்தப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482  கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம் ஒரு  பயிர் என்ற புதிய திட்டம் 15 ஆயி ரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.