தூத்துக்குடி, அக். 1- தேவைப்படும் பட்சத்தில் தாமிர பரணி ஆற்றில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரி வித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2018 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனு வில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள் மண்ட பங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவு நீர் கலப் பதை தடுக்கவும் உத்தரவிட வேண் டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை கடந்த வாரம் விசா ரித்த உயர்நீதிமன்றம் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கலப்பதை கூட அனுமதிக்க மாட்டோம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதி காரிகளின் வீடுகளில் இது போல கழிவு நீர் சென்றால் பார்த்துக் கொண்டிருப்பார் களா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதி பதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் முன்பு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாநகராட்சி ஆணையர் சார்பில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடி யாக கலப்பதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை முற்றிலும் தடுக்க கால அவ காசம் அளிக்க வேண்டும் என கோரப் பட்டது. இதற்கு மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அழகு மணி ஆஜராகி, நெல்லை மாநகராட்சியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் முழுவதும் தடுக்கப்பட வேண்டும் இதனை முன் மாதிரியாக கொண்டு மற்ற ஆறுகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். தாமிர பரணி ஆறு தொடக்கம் முதல் கடலில் கலக்கும் பகுதி வரை அதன் இருபுற மும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இந்த ஆற்றில் கலக்கும் கழிவு நீரை அவ ரவர் பகுதியில் தடுப்பதற்கான திட்டங் கள் என்னென்ன என்பது குறித்து தனித் தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத் துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் அருள் நியமிக்கப்படுகிறார். மேலும் நெல்லை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் நாங்களே நேரில் வந்து தாமிரபரணி ஆறினை ஆய்வு செய்வோம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்.3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.