சென்னை,ஜூன் 16- சனாதன ராஷ்ட்ரக் கனவின் அடிப் படையிலேயே பொது சிவில் சட்ட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்கிற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், “பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசின் தூண்டு தலால் இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. தேவையில்லாத அல்லது விரும்பத்தகாத பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதைவிடவும் பாகுபாடு காட்டும் சட்டங்கள் குறித்தே சட்ட ஆணையம் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. பெரும்பாலான நாடுகள் இப்போது வித்தியா சங்களை அடிப்படையாகக் கொண்ட பன்மைத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கி நகர்கின்றன. வெவ்வேறான கலாச்சாரங்கள் இருப்பது பாகுபாட்டைக் குறிக்காது.
அது வலுவான ஜனநாயகத்தையே குறிக்கிறது” என அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தி யாவில் பெரும்பான்மை மதத்த வராக இருக்கும் இந்துக்களின் ஆத ரவைப் பெற முடியும் என்று பாஜக மனப்பால் குடிக்கிறது. இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் பட்டியல் சமூகத்தினரும் பழங்குடி மக்களும் இந்த ஆட்சியாளர் களால் கடுமையான ஒடுக்குமுறைக் கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகியுள் ளனர். இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டே பெரும்பான்மை மக்களை ஏமாற்றி சிறிய எண்ணிக்கை கொண்ட முன்னேறிய உயர்சாதி யினருக்கும் பன்னாட்டு நிறுவன- கார்ப்பரேட் பெருமுதலாளி களுக்கும் மட்டுமே சேவை செய் வதாக இந்த பாஜக அரசு உள்ளது. 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்து கொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனைத் தீவிரமாக முடுக்கிவிடுகிறது. அரசியல் லாபத்துக்காக நாட்டில் சமூகப் பதற்றத்தையும் அமைதியின் மையையும் உருவாக்க சதிசெய்யும் பாஜக- சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.