tamilnadu

img

மாவோயிஸ்டுகள் படுகொலைக்கு நீதி கேட்டு இடதுசாரிகள் போராட்டம்

மாவோயிஸ்டுகள் படுகொலைக்கு  நீதி கேட்டு இடதுசாரிகள் போராட்டம்

தஞ்சாவூர், ஜூன் 4 - நாட்டின் இயற்கை மற்றும்  கனிம வளங்களை, பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் மீதான படுகொலைக்கு உச்ச  நீதிமன்ற நீதிபதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து, நீதி விசாரணை கோரி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த  நிலையில், சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவராஜூ என்ற  நம்பல கேசவராவ் மற்றும் அமைப்பின்  தோழர்கள் கொல்லப்பட்டனர். மாவோ யிஸ்டுகள் மீதான படுகொலை குறித்து  நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரிகள் பொது  மேடை சார்பில், புதன்கிழமை தஞ்சா வூர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி  வைத்தார். மக்கள் அதிகாரம் மூத்த  தலைவர் காளியப்பன் நிறைவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மைய  மாவட்டச் செயலாளர் கோ.ஜெய் சங்கர், மக்கள் ஜனநாயக இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் மணி வேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல்ஆபுதின், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செய லாளர் தங்க.குமரவேல், மகஇக இணைச் செயலாளர் ராவணன், எழுத்தாளர் சாம்பான், என்டிஎல்எப் நிர்வாகிகள் ஆர்.லட்சுமணன், நா.சாமி நாதன், மணிகண்டன், ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.           இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவா ணன் நன்றி கூறினார்.