நகர நிர்மாணம் என்பது புலம் பெயர் தொழிலா ளர்களைக் கொண்டே நடைபெற்றுவருவது என்பது சமீப காலத்தியது என்று கருதலாகாது. காலங்காலமாகவே இது நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளின் நிர்மாணத்திற்கு முன்னரே இலங்கையிலும், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் தோட்டங்களிலும் பணியாற்றிட லட்சக்கணக்கான வர்கள் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்த மாகாணத்திலிருந்து கப்பல்களில் தட்டுமுட்டுச் சாமான் களைப் போன்று அழைத்துச் செல்லப்பட்டிருக்கின் றனர். கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள்படும் துயரம் குறித்து பாரதி பாடியது இத்தருணத்தில் நினைவில் கொள்ளத்தக்கது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அண்ணா சாலையில் சட்ட மன்றத்திற்காக கட்டப்பட்டு, பின்னர் பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றமடைந்த கட்டிட நிர்மாணத்தில் வெளி மாநில குறிப்பாக பீகார் மாநிலத்த வரே பங்கேற்றிருப்பது அன்றைய தினம் ஒரு நாள் செய்தியாக வெளியானதை நாம் அறிவோம். இத்த னைக்கும் சென்னை மாநகரில் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத துறைகளில் பணியாற்றி வருவதையும், அவர்கள் வாழ்விடம் மட்டு மின்றி வாழ்நிலையும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதோடன்றி கடுமையான சுரண்டலுக்கு உள்ளாவதையும் அன்றாடம் நாம் காணாதிருக்க முடியாது.
சமீபத்தில் சென்னை நகரில் வெள்ளத் தடுப்பு நட வடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப் பட்டுவரும் மழைநீர் வடிகால் அமைப்புப் பணிக ளுக்காக சென்னை மாநகராட்சி வெளி மாநிலங்களிலி ருந்து விமானம் மூலம் தொழிலாளர்களை அழைத்து வரு வதாக இந்து (15.07.2022) பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்தப் பகுதிக்கு எத்தனை பேர் தேவை என்பதும், பணி முடிக்கும் பொருட்டு எவ்வளவு பேர் அழைத்துவரப்பட்டார்கள் என்பதும் அச்செய்தியில் விவரமாகத் தரப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு அவர்களின் சட்ட திட்டங்களுக்கேற்ப தற்காலிக பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதை இச்செய்தி வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் திரள் நெருக்கமாக அதிலும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இந்நகர்களிலேயே அல்லது அடுத்த டுத்த மாவட்டங்களிலேயே பெருமளவில் இருந்து வந்த நேரத்திலும், உரிய பணிகளுக்காக அல்லது காலக்கெடு வில் முடிக்கும் கருத்தில் வெவ்வேறு மாநிலங்களிலி ருந்து அழைத்து வரப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், அது சொல்லப்படாத வேறு காரணிகளையும் உள்ள டக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கும், உள்ளூர் அளவில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் சரியான ராசிப் பொருத்தம் இல்லையென்பது இன்றல்ல நேற்றல்ல கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருவதை சென்னை மாநகராட்சி முன்னர் ஆண்டுதோறும் முன்வைத்திட்ட அறிக்கைக ளின் மூலம் அறிய முடிகிறது. முதன்மை சுகாதாரத் துறை அலுவலர் டாக்டர் டபிள்யூ.ஆர்.மெக்டொனால்டு விடுப்பில் சென்றுவிட்ட படியால் பொறுப்பு அலுவலர் கேப்டர் ஏ.ஜே.எச்.ரஸ்ஸல் அவர்களால் 1914 மே 22 அன்று வெளியிடப் பட்ட மாநகராட்சியின் 1913ஆம் வருடத்திய சுகாதாரத் துறையின் நிர்வாக அறிக்கை, சென்னை நகரில் குப்பையகற்றும் பணிகளில் கடுமையான ஆட்பஞ்சம் இருந்து வந்ததை விவரமாகவே எடுத்துரைக்கிறது. ஆண்டு முழுவதுமே குப்பை அகற்றுவதற்கும், குப்பை மற்றும் மலஜல மாட்டுவண்டிகளை ஓட்டுவ தற்கும் போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் கிடைப் பது கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் இவ்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அவற்றை காண்போம்.
மாட்டு வண்டி டிப்போவின் மேற்பார்வையாளர்க ளுக்கு தினக்கூலிகளை பயன்படுத்திக் கொள்வதற் கேற்ப ரூபாய் பத்து முன் பணமாக அளிக்கப்பட்டி ருக்கிறது. குப்பை அல்லது மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டு வரும் ஒரு கூலி, கூடுதலாக பெருக்குவது அல்லது மாட்டு வண்டி ஓட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டால், ஒவ்வொரு அரை நாளுக்கும் ஓரணா கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்த போதிலும் ஆள்கிடைப்பது என்பது சுலபமானதாக இல்லை. எனவே இதற்கான தனியார் ஏஜெண்ட் என் சேஷாத்திரி ராஜுவிடம் நூறு தினக்கூலிகளை அழைத்து வருமாறு கூறிய போதிலும், அவரால் மூன்று தொகுதிகளாக நாற்பது பேரை மட்டுமே அனுப்பி வைக்க முடிந்திருக்கிறது. பின்னரே சுகாதாரத் துறையின் தலைமை மேற்பார்வை யாளரும் அனுபவம் நிறைந்த சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஒருவரும் நெல்லூர், குண்டூர், வட ஆற்காடு மாவட்டங்க ளுக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கின்ற னர். இத்தனைக்கும் அந்தந்த இடங்களில் உள்ளூர் அளவில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவர்க ளுக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே உரிய தொழிலா ளர்களை கல்கத்தா மற்றும் ரங்கூனுக்கு ஆள் அனுப்பி அனுபவத்தின் அடிப்படையில் மதராசுக்கும் அனுப்பக்கோரி கஞ்சம் ஆட்சித் தலைவருக்கும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.
வடக்குப் பகுதியில் உள்ள இரண்டு மாட்டு வண்டி டெப்போக்களில் வண்டியோட்டிகளுக்கான குடியிருப்பு இருந்த போதிலும் இதற்கு ஆள் வரவில்லை. இவற்றையெல்லாம் பட்டியலிட்ட அறிக்கை இதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மத ராசில் பெரும்பாலான தொழிலாளர்கள் மாதக்கூலியாக குறைந்த பட்சம் ரூபாய் பத்தும் அதற்கு மேற்பட்டும் பெற்றுவருவதாகவும் அதற்கு நிகராக மாநகராட்சி கூலியை உயர்த்தாவிடில் இப்பிரச்சனை நீடிக்கவே செய்யும் என்றும் கூறுகிறது. இதன் பின்னர் வேறு பல கோரிக்கைகளும் தொழி லாளர்கள் மத்தியில் குறிப்பாக குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடியவர்களிடம் கூடுதலாக இருந்து வருகிறது. பணி நிரந்தரமின்மை, விடுப்புச் சலுகை, அதிகார வரம்பில் இருந்து வரும் சுரண்டல் போன்றவற்றை சுகாதாரத் துறை பணியாளர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். எனவேதான் இப்பணி களுக்கு பெருமளவில் ஆள் கிடைப்பதில்லை.
இதேபோக்குதான் ஒப்பந்ததாரர்களிடம் இன்னும் மோசமாக இருந்து வருகிறது. எனவேதான் மாநக ராட்சிப் பணிகளில் மட்டுமின்றி அதைச் சார்ந்த ஒப்பந்ததாரர்களின் பணிகளிலும் ஆட்பஞ்சம் இருந்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை வடிகா லுக்காக தோண்டப்பட்ட மண்ணிற்குள் தலையை புதைத்துக் கொள்வதில்தான் குறியாக இருக்கிறதே யொழிய இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்வதில்லை. தவிர மலக்குழிக்குள் மனிதர்கள் மரணமடைகையில்தான் மனித உரிமைக் கமிஷனும் துள்ளி வருகிறது. இதன் உச்சம்தான் ஒப்பந்ததாரர்களின் சுரண்டலுக் காக விமானத்தில் ஆள் பிடித்து வருவது என்பதும். 1913ஆம் வருடத்திய அறிக்கையில் கேப்டன் ரஸ்ஸல் அந்த அறிக்கையை தயார் செய்வதற்கு முதன்மை துணை நிலை சுகாதார அதிகாரி டாக்டர் சிங்காரவேலு முதலியார் துணை நின்றதாக கூறி அவ ருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் ஓ தணிகாசலம் செட்டி சாலைக்கு இணையாக, தியாகராயா சாலையையும் மாசிலமணி சாலையை யும் இணைக்கும் சாலை இந்த டாக்டர் பெயரால்தான் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.