புதுச்சேரி,டிச.11- வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. புயலால் பல்வேறு இடங் களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக் கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மின் விநியோகமும் தடை செய்யப்பட்டது. பலத்த காற்று காரண மாக புதுச்சேரி கடற்கரை சாலை, நீடராஜப்பர் வீதி, முத்தியால்பேட்டை, கதிர்காமம், கோரிமேடு, ரெட்டியார்பாளையம், மங்கலம், வில்லியனூர், கன்னியக்கோயில், சுத்துக் கேணி, திருபுவனை, சன்னியாசிக்குப்பம், காலாப்பட்டு சுனாமி குடி யிருப்பு உள்ளிட்ட இடங்க ளில் மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரக்கிளை களும் முறிந்து விழுந்தன.