சென்னை, மார்ச் 22 - சாதி அமைப்பை, சுரண்டலை ஒழிக்க வர்க்கப் போராட்டத்தை வலுப்ப டுத்துவோம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர் பி.சம்பத் கூறினார். சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியு றுத்தி திங்களன்று (மார்ச் 21) சென்னை யில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய இந்த மாநாட்டில் தலைவர் கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:
கே.சாமுவேல்ராஜ்
மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய முன்னணியின் பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், “மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும் ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற தொடர் போராட்ட ங்களை நடத்தின. இதற்காக சேலம்-சென்னை இடையே 13 நாட்கள் நடை பயணத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. தேர்தலுக்கு முன்பாக கோரிக்கை சாசனத்தை வெளி யிட்டது. இதனையடுத்து பாஜக தவிர்த்துஅனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது சட்டமன்ற தேர்தல் அறிக்கை யில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தன” என்றார். “விமலா ஆணவப் படுகொலை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம், சிறப்பு தடுப்புச் சட்டத்தை கொண்டு வர உத்தர விட்டார். அதனை அரசு அமல்ப டுத்தவில்லை. ஆணவப் படுகொலை வழக்குகளில் அரசு எந்த உதவியும் செய்வதில்லை. இதனையும் மீறித்தான் நமது வழக்கறிஞர்கள் நீதியை நிலை நாட்டுகின்றனர்” எனவும் குறிப்பிட்டார்.
சாதி ஒழிப்புச்சட்டம் : சம்பத்
மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முன்னணியின் சிறப்புத் தலைவர் பி.சம்பத், “சிறப்புச்சட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி ஆளும் வர்க்க த்திடம் கெஞ்சவில்லை. அதை நிறை வேற்ற வேண்டியது வரலாற்றுத் தேவை. உழைக்கும் வர்க்கம் ஆட்சியதி காரத்திற்கு வரும்போது சாதி ஒழிப்பு சட்டமே வரும்” என்று குறிப்பிட்டார். “ஒடுக்குமுறைக்கு எதிரான போராட் டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்காக ஒடுக்கப்பட்ட இயக்கங்க ளையும், சமூக ஜனநாயக இயக்கங் களையும் திரட்டுகிறோம். சாதி அமைப்பை, சுரண்டல் ஒழிக்க வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்” என்றும் அவர் கூறினார்.
வர்ணமும் வர்க்கமும் - வழக்கறிஞர் ப.பா.மோகன்
சாதிய கட்டமைப்பு படிநிலை நீதிமன்றத்திலும் உள்ளது. இளவரசன் கொலைக்கு உயர்நீதிமன்றமும் ஒரு காரணம். கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜ் குற்றவாளியாக தண்டனை பெற்று ள்ளார். போராட்டமே தற்போதுதான் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட வழக்கறிஞர் ப.பா.மோகன், சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்க போராட்டத்தையும் இணைத்து சட்டத்தின் துணைகொண்டு சமூகத்தை மாற்றமுடியும் என்றார்.
வழக்கறிஞர் நிர்மலாராணி
ஆணவப் படுகொலை வழக்குகளில் கொல்லப்பட்டவர்களில் 83 விழுக்கா ட்டினர் பெண்களாக உள்ளனர். இந்தப் பெண்களை பாதுகாக்க சிறப்புச்சட்டம் தேவை. சாதிய அமைப்பு தேவை என்ற மனநிலை நீதிபதிகளிடையே உள்ளது. எனவேதான் வன்கொடுமை வழக்கு களை பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. கடந்தகால வழக்கு அனுப வங்களில் இருந்து்தான் தனிச் சட்டம் கோருகிறோம் என்று வழக்கறிஞர் உ.நிர்மலாராணி குறிப்பிட்டார்.
மார்க்சியவாதிக்கும், மநுவாதிக்கும் என்ன வேறுபாடு?
“வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. பார்ப்பனீயத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் சிறப்புச்சட்டம் முக்கிய மானது. சிறப்புச்சட்டம் வந்தால் தனி நீதிமன்றம் அமைக்கப்படும். வழக்கை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படும்” என்று குறிப்பிட்ட ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், “அருந்ததியர் உள்ஒதுக்கீடு அமலாகவில்லை என்று 2011ல் தொடரப்பட்ட வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை” என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அருந்ததிய மக்களுக்கு ஆதர வாக பிற சமூகத்தினரையும் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடுவதை யும், தலித், தலித் அல்லாதோரை இணைக்கும் புள்ளியாக இருப் பதையும் சுட்டிக்காட்டிய ஜக்கையன், அருந்ததிய சமூகத்தை சேர்ந்த எல்.முருகன் ஒன்றிய அமைச்ச ராக இருந்தபோதும், அவர் ஆணவக் கொலைகளை பற்றி பேசியது கிடை யாது. இதுதான் மார்க்சியவாதிக்கும், மநுவாதிக்கும் உள்ள வேறுபாடு என்றார். “அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு, தூய்மைப் பணியாளர், காலணித் தொழிலாளர் நலவாரியம் போன்ற வற்றை கலைஞர் ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றுத் தந்தது. சிறப்புச்சட் டத்தையும் அவரது மகன் ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றுத்தரும்” என்றும் ஜக்கையன் கூறினார்.
கோவை ரவிக்குமார்
ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கோவை.ரவிக்குமார் குறிப்பிடுகையில், “சாதிய கட்டமை ப்பில் உ.பி.யை போன்று கோவை மண்டலம் அமைந்துள்ளது. ஆணவக் கொலைகள், மர்ம மரணங்கள் அனைத் தும் சந்தேக மரணங்களாக மாற்றப்படு கின்றன. இதற்கு காரணம் அந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகா ரிகள் முற்பட்ட சாதியினராக இருப்பது தான். பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதி வெறியூட்டப்படுகின்றனர். இதனால் அவர்களே பயனடைகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
நாகை திருவள்ளுவன்
“மதவாத பாஜக, சாதிய சக்திகளை தூண்டி விடுகின்றன. எனவே, சாதியத்தை பாதுகாக்கிற அனைத்தை யும் வீழ்த்த வேண்டும். சமூக நீதி களத்தில் பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களை விட இடதுசாரி இயக்க ங்கள் ஒருபடி மேலே சென்று போராடு கின்றன. பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் இடதுசாரிகளோடு கை கோர்த்து களத்தில் நிற்போம்.” என்று தமிழப்புலிகள் கடசித் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறினார். இந்த நிகழ்வில் ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வை.தேவதாசு உள்ளிட்டு முன்னணி யின் நிர்வாகிகள் பேசினர்.