சென்னை, ஏப். 22- பன்முகத்தன்மை கொண்ட தலை வர்கள் சுனீத் சோப்ரா, கே.வரத ராசன். ஜி.மணி ஆகியோர் என படத் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய தலை வர்கள் புகழாரம் சூட்டினர். விவசாயத் தொழிலாளர்களின் விடியலுக்காக களம் கண்ட தோழர் சுனீத் சோப்ரா, விவசாயிகள் - விவ சாயத் தொழிலாளர்களின் போராட்டப் பாதையில் புதிய திருப்பங்களை கண்ட மகத்தான தலைவர்கள் தோழர் கள் கே.வரதராசன் - ஜி.மணி ஆகி யோரின் படத்திறப்பு நிகழ்ச்சி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கம் சார்பில் சென்னையில் வெள்ளி யன்று (ஏப். 21) நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தோழர் சுனீத் சோப்ரா படத்தை திறந்து வைத்து பேசுகையில், சுனீத் சோப்ரா இங்கிலந்தில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தில் படித்தவர். பள்ளி ஆசிரி யராகவும் பணியாற்றியவர். அங்கு தான் அவருக்கு மார்க்சிய சித்தாந்தத் தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தொழிலா ளர்களின் ஒற்றுமையை அவர் தொட ர்ந்து வலியுறுத்தி வந்தார். பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் மீது அவ ருக்கு மிகப்பெரிய பிடிப்பும், நம்பிக் கையும் இருந்தது. அதனால்தான் அவர் இங்கிலாந்தில் இருக்கும் போதே பாலஸ்தீன மக்களுடைய விடு தலைக்காக பயிற்சி வகுப்புக்கு சென் றார். 1972ஆம் ஆண்டு அவர் இந்தியா விற்கு வந்தார்.
அவர் ஜவகர்லால் பல்கலைக்கழ கத்தில் (ஜெ.என்.யூ) பயிலும் போது தன்னை மாணவர் சங்கத்தில் இணைத் துக் கொண்டார். மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார். அதன் பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். அனைத்து நூல் களையும் ஆழமாக படிக்கக் கூடிய வர். கடினமான விஷயங்களை தேர்ந் தெடுத்து பணியாற்றுவார். கலைத்துறையில் மிகவும் சிறந்து விளங்கியவர். சிறந்த ஓவியங்களை வாங்குவார். அதன் விலை ஏறும் போது அதை விற்பார். அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது முழுநேர பணி யை மேற்கொண்டார். சிறந்த எழுத்தா ளர், விமர்சகர். ஓவியத்தில், கலைத் துறையில் ஆர்வம் கொண்டவர். பல பத்திரிகைகளில் எழுதியுள்ளார். எந்த பாரபட்சமும் இன்றி உண்மைகளை எடுத்துரைப்பார். அப்படி அவர் எழுத் தாளராகவோ, கலை விமர்சகரா கவோ மட்டும் செயல்பட்டிருக்கலாம். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் வாலிபர் சங்கத்தில் செயல்படும் போதே மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா போன்ற பகுதி களில் விவசாயத் தொழிலாளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் 32 ஆண்டுகள் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மிகச்சிறந்த தலைவராக செயல்பட்டார். அதேபோல் 1995 முதல் 2015ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக திறம்பட செயல்பட் டார். புரட்சி நடக்கும், முற்போக்கான சிந்தனைகள் மேலோங்கும், ஜன நாயகம் தழைத்தோங்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எந்த இடத்திலும் ஊச லாட்டம் இல்லாமல் இறுதிவரை தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதி யுடன் செயல்பட்டவர் என்று என்.ராம் புகழாரம் சூட்டினார்.
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தோழர் கே.வரதராசன் படத்தை திறந்து வைத்து பேசுகை யில், ராஜ வம்ச குடும்பத்தில் பிறந்த தோழர் சுனீத் சோப்ரா மார்க்சிய தத்து வத்தால் ஈர்க்கப்பட்டு தன்னை இடது சாரி இயக்கத்தில் இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டவர். தோழர் கே.வரதராசன் பொறியாளராக பணி யாற்றும் போது மார்க்சிய தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, தனது பணியை ராஜினாமா செய்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திருச்சி மாவட்டச் செயலாளராக, மாநில செயற்குழு, மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு என அனைத்திலும் திறம்பட செயல்பட்டார். விவசாயி கள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக, பொதுச்செயலாளராக செயல்பட்டார்.
பல்வேறு நெருக்கடியான காலங்களில் கூட சுனீத் சோப்ரா, கே.வரதராசன், ஜி.மணி உள்ளிட்ட பல தலைவர்கள் அவர்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்து பணி யாற்றினார்கள். ஆனால் சித்தாந்தத்தை முறையாக படிக்காமல் இன்றைய அரசியல் சூழ்நிலையை மட்டும் வைத்துக் கொண்டு யோசித்தோம் என்றால் அது நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தும். கே.வரதராசன் “இந்திய தத்துவ தரிசனம்”, “சாதி வர்க்கம் மதம்” எனும் இரண்டு சிறந்த நூலை எழுதினார். அந்த இரண்டு நூல்களையும் வாசித்தால். அவர் எவ்வ ளவு ஆழ்ந்த சித்தாந்தப் பிடிப்புடன் செயல் பட்டார் என்பதை அறிய முடியும். சுனீத் சோப்ரா, கே.வரதராசன், ஜி.மணி போன்ற தோழர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். 3 பேரும் கட்சியில் வேறு பொறுப்புகளை தேர்ந்தெடுக்காமல் கடினமான விவசாயத் தொழிலாளர்களை திரட்டும் பணியை தேர்ந்தெடுத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள். அதேபோல் நாமும் நம்முடைய பணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை
திரிபுராவில் கட்சித் தோழர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கட்சி குடும்பத்தினரை பாதுகாக்க முடியவில்லை. அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தால், அவர்களின் அடிப்படைத் தேவை களை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே 20 இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாங்கிக் கொடுத்தால் அதன் மூலம் அந்த குடும்பங்களை பாதுகாக்கலாம். ஏதாவது உதவி செய்ய முடியுமா என கேட்கிறார். எவ்வளவு நெருக் கடியில் நம்முடைய தோழர்கள் அங்கே பணி யாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.
கம்யூனிஸ்ட்கள்தான் முதல் எதிரி
பாஜக, ஆர்.எஸ்.எஸ். தங்களின் முதல் எதிரியாக கம்யூனிஸ்டுகளைத்தான் பார்க்கிறார் கள். இரண்டாவது எதிரியாகத்தான் இஸ்லாமி யர்களையும், 3ஆவது எதிரியாகத்தான் கிறித்த வர்களையும் பார்க்கிறார்கள். ஏனென்றால் சித்தாந்த ரீதியான எதிரி கம்யூனிஸ்டுகள்தான். அதனால் தான் இளைஞர்களையும், மாணவர்க ளையும் பல்வேறு சக்திகள் சாதி, மத அடிப்ப டையில் திரட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற அடிப்ப டையில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் இணைத்து பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. எனவே சுனீத் சோப்ரா, கே.வரதராசன், ஜி.மணி உள்ளிட்ட தோழர்கள் எப்படி சித்தாந்த ரீதியாக உறுதியுடன் செயல்பட்டார்களோ அந்த உறுதியுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளை வீழ்த்துவோம். அதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
ஏ.லாசர்
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், தோழர் ஜி.மணி படத்தை திறந்து வைத்து பேசுகையில், தோழர் சுனீத் சோப்ரா எப்படி கிராமப்புற ஏழை விவசாயத் தொழிலா ளர்களை திரட்ட வேண்டும், சட்டரீதியான அவர்க ளுடைய பிரச்சனைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும், சமூக ரீதியாக அவர்களுக்கு ஏற் பட்டுள்ள புறக்கணிப்புகளை எப்படி எதிர்கொள் வது என்று தோழர்களுக்கு பயிற்றுவித்தவர். சுனீத் சோப்ரா, டைம்ஸ் ஆப் இந்தியா குழு மத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த குடும்பத்தினர் நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, தொழிலை கவனிக்குமாறு வலியுறுத்தினர். அப்போது சுனீத் சோப்ரா கூறினார். நான் கம்யூனிஸ்ட் என்று தெரிந்துதான் எனக்கு திருமணம் செய்து வைத்தீர்கள். இப்போது நீங்கள் உங்கள் திசை வழியில் என்னை இழுக்க முயற்சிப்பதை நான் ஏற்க முடியாது என்று உறுதியாகக் கூறி மனைவி யிடம் இருந்து விவாகரத்து பெற்றார். தான் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாட்டிற்காக அனைத்து வசதி வாய்ப்புகளையும், குடும்பத்தை யும் விட்டு வெளியேறி உழைப்பாளி மக்க ளுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி யவர். தோழர் கே.வரதராசன் அரசு பணியை விட்டு விட்டு விவசாயத் தொழிலாளர்களை திரட்டும் பணியை திறம்பட மேற்கொண்டார்.
100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்ட போது, அந்த திட்டங்கள், சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெரி யாது. அதை விவசாயத் தொழிலாளர்களுக்கு கற்றுக் கொடுத்ததில் பெரும்பங்காற்றியவர் தோழர் மணி என்றார். அதுகுறித்த நூலையும் வெளியிட்டார். அதன்மூலம் மாநிலம் முழுவதும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் அதிகாரிகளிடம் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கினார். எனவே அந்த 3 தோழர்கள் விட்டுச்சென்ற பணிகளை நாம் முன்னெடுப்போம், கிராமப்புற உழைப்பாளி மக்களை திரட்டுவோம் என்றார்.
பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், சுனீத் சோப்ரா 30 ஆண்டுக ளுக்கும் மேலாக மையத்தில் இருந்து விவசாயத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டிய மிகச்சிறந்த தலைவர். தோழர் கே.வரதராசன் பாடலா சிரியர், இசையமைப்பாளர், நடனம் என பன்முகத்தன்மை கொண்டவர். கிராமப்புற விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, ஆலைத் தொழிலாளர்களை திரட்டுவதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது என்றார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக திறம்படச் செயல்பட்டார். பல்வேறு சிறு நூல்களை மொழி யாக்கம் செய்தவர். 3 தோழர்களும் இந்தியா வில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்து வதற்கான அச்சாணியாக விளங்கினார்கள். அவர்கள் விரும்பிய சமூக மாற்றத்தை அனை வரும் ஒன்றிணைந்து ஏற்படுத்துவோம்.
இதில் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோரும் பேசினர். விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், பொருளாளர் கே.பி. பெருமாள், மாநிலச் செயலாளர்கள் துளசி நாராயணன், நேரு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச் செய லாளர் வீ.மாரியப்பன், பொருளாளர் ஏ.பழ னிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.