tamilnadu

தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சியகம் துவக்கம்

சென்னை, மார்ச் 13- சென்னை கோயம்பேட்டில் தமிழர்களின் பாரம்பரியமான இசைக் கருவிகளின் காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கோசை நகரான் தமி ழர் தொல்லிசை கருவியகம் சார்பில் தொடங்கப் பட்டுள்ள இந்த காட்சியகத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி  ஜோதிமணி தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீதி பதி கூறுகையில், அனைத்து சிவபெருமான் கோவில் களிலும் இது போன்ற காட்சியகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  80 வகையான இசைக்கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இலவச கண்காட்சியாக செயல்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிவகுமார் தெரிவித்தார்.