tamilnadu

img

நிலம் - உணவு - வேலை

நிலம்

z    கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரிய வேளாண் வணிகங்களுக்கு சாதகமாக நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதை மாற்றியமைக்க வேண்டும்.
z    நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான விரைவான மற்றும் விரிவான நடவடிக்கைகளை உறுதி செய்தல்; மீத
முள்ள உச்சவரம்பின் கீழான உபரி நிலங்களை கையகப்படுத்த மாநில அரசுகளை ஊக்குவித்தல்; கையகப்படுத்தப் பட்ட அனைத்து உபரி நிலங்களையும் உடனடியாக விநியோகித்தல்; நில விநியோகத்தில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி.க் களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்தல்; நில உரிமைக்கான பெண் களின் சம உரிமையைப் பாதுகாக்கும் கூட்டுப் பட்டாக்களை வழங்குதல்; சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கான தீர்வை குறிப்பிட்டகாலவரையறைக்குள் உறுதி செய்வதற்காக புதிய நில தீர்ப்பாயங் களை நிறுவ, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
z    அனைத்து குத்தகைதாரர்களின் பதிவையும் உறுதி செய்தல்; அனைத்து மாநிலங்களிலும் குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்; உரிமம் பெற்ற பயிரிடுபவர் அட்டைகளை வழங்கு வதன் மூலம் மானியங்கள், காப்பீடு மற்றும் வருமான ஆதரவு உள்ளிட்டு அனைத்து குத்தகைதாரர்களுக்கும் நன்மைகளை உறுதி செய்தல்.
z    நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டம் 2013-இல் திருத்தம் கொண்டு வருதல்; பொது நோக்கத்திற்கான கடுமையான வரையறை, பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களிடமிருந்தும் முழுமையான மற்றும் முன் தகவலறிந்த ஒப்புதல், சமூக தாக்க மதிப்பீடு மற்றும் இழப்பீடு மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் மேம்பட்ட நில மதிப்பில் பங்கு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் நிலமெடுப்பு முயற்சிகள் நடைபெற வேண்டும்.
z    மேய்ச்சல் நிலங்கள், சமுதாயக் காடுகள், புதர்க்காடுகள் போன்ற பொது நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கையகப்படுத்தப்படுவதைத் தடுத்தல்.
z    பொது நம்பிக்கைப் பொறுப்பில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிலங்களையும் குத்தகை, விற்பனை, திசைதிருப்பல் அல்லது வேறு எந்த வகையிலும் தனியார் துறைக்கு கைமாற்றுவதிலிருந்து பாதுகாத்தல்.
z    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளித்து, நிலமற்ற மற்றும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு சாகுபடி செய்யக்கூடிய தரிசு நிலங்களை இலவசமாக ஒப்படைத்தல்; நிலத்தின் மீது பெண்களுக்கு சம உரிமை உள்ளிட்ட கூட்டுப் பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும்.
z    ஊரக மற்றும் நகர்ப்புற நிலமற்ற அனைத்துப் பிரிவினருக்கும் வீட்டு மனை வழங்குதல்.
z    இதுவரை மேற்கொள்ளப்படாத அனைத்து மாநிலங்களிலும் குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பதிவு செய்து பாதுகாப்பது.

உணவு

பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பாடுபடும்.

q    வருமான வரி செலுத்துவோர் நீங்கலாக, தற்போதுள்ள இலக்கு முறையை நீக்கி, சீர்திருத்தப்பட்ட மற்றும் வலுப் படுத்தப்பட்ட அனைவருக்குமான பொது விநியோகத்தை நிறுவ முயலுதல். இதை ஆதாருடன் எவ்வகையிலும் தொடர்பு படுத்தக்கூடாது.
q    ஒரு தனிநபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் வழங்குதல் – 5 கிலோ இலவசமாகவும், 5 கிலோ மானிய விலையிலும்.
q    இந்த துறையில் மாநில அரசுகளின் முயற்சிகளை ஆதரிப்பது.
q    உணவு தானியங்களுடன், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பொது 
விநியோக முறை வழங்கும்.
q    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் உணவு, சூடான, சமைத்த சத்தான உணவை உறுதி செய்வதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
q    உணவு பாதுகாப்பு சட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிபந்தனையின்றி ரூ.6000 உதவித்தொகை அமல்படுத்த வேண்டும்.
q    இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்றோர், விதவைகள், ஊனமுற்றோர் போன்ற நலிவுற்ற பிரிவினருக்கு இலவச சமையலறைகள் போன்ற சிறப்பு நடவடிக்கைகள்.
q    ஆதிவாசிகள் மற்றும் இதர பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினருக்கு உணவுப் பாதுகாப்பை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பங்கீட்டு முறையை வலுப்படுத்துதல்.
q    ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆதார் இணைப்பு இல்லாமல் மானிய விலையில் வழங்கப்படும்.
q    உணவு தானியங்களுக்கு பதிலாக பணப் பரிமாற்றம் இல்லை.

வேலை

H    அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் வேலை உறுதிச் சட்டம் இயற்றுதல்.
H    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட வேண்டும்; இத்திட்டத்தின் கீழ் அனு
மதிக்கப்பட்ட பணிகளின் பட்டியல், கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப் பட வேண்டும்; செயலி அடிப்படையிலான வருகை முறையை திரும்பப் பெறுதல் வேண்டும்.
H    வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்தும் தொழில்களை ஆதரிக்க சிறப்பு தொகுப்புகள்.
H    தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் கொள்கைகள் மூலம் வேலையின்மையை கட்டுப்படுத்துதல்; சம்பந் தப்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வேலையளிப்போருக்கு நிதியுதவி / ஊக்கத்தொகை / சலுகைகள் வழங்குதல் ஆகியவற்றை இணைத்தல். 
H    அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்; பணி நியமனத்துக் கான தடையை நீக்க வேண்டும்; ஆண்டுதோறும் 3 சதவீதம் அரசுப் பணியிடங்களை ஒப்படைக்க வேண் டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பின்னடைவு பணியிடங் கள் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.