டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றிருக்கும் விசாகனை சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர். வெங்கடபதி, பொதுச் செயலாளர் இரா. அருள்குமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மதுபான உற்பத்தி கம்பெனிகளால் வழங்கப்படும் இறக்கு கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினர்.