பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரி வேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நிகழ்வு ஜன வரி 13ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி கும்பமேளா நிறைவு பெறும் இந்நிகழ்வில் தினமும் கோடிக்கணக் கான மக்கள் நீராடி வருகின்றனர். இந்நிலையில், திரிவேணி சங்க மத்தில் பெண்கள் குளிப்பதை, உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து விற் பனை செய்யப்பட்டு வருவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. அதாவது இன்ஸ்டாகிராம் வாயிலாக டெலிகிராம் மற்றும் ஆன்லைன் இணையதளங்கள் மூலம் ரூ.500, ரூ.1000 என்ற தொகையில் வீடியோக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அலகாபாத் காவல்நிலையத்தில் பெண்கள் புகார் கள் அளித்துள்ளதாகவும், விவரங்கள் கிடைத்தவுடன் கைது உள்ளிட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் காவல்துறை யினர் கூறியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.