tamilnadu

img

கேரள பெண்களுக்கு ஊக்கமளிக்கும் குடும்பஸ்ரீ - எம்.பி.ராஜேஷ்,

கேரள சமூகத்தில் பெண் களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து  வரும் அமைப்பு குடும்பஸ்ரீ. கடந்த 25 ஆண்டுகாலமாக பெண்களின் திறனை வெளிப்படுத்தி வறுமையை போக்கிய நிறுவனம் இது. ஓராண்டு காலம் நீடித்த வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் கடந்த 2023 மே 17 அன்று நிறைவு பெற்றது. திரு வனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதா னத்தில் அதன் நிறைவு விழா நடை பெற்றது. வறுமையை தோற்கடித்த சாதா ரண பெண்களின் மறுவாழ்வும், பொருளாதாரமும் மனநலமும் மேம் பட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்ட வரலாறு கொண்டது குடும்பஸ்ரீ. ஆசிய கண்டத்திலேயே மிக்பெரிய பெண்களின் கூட்டமைப்பு இது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அயல்கூட்டம் (அக்கம்பக்கக் குழு) அமைப்புகளில் 46.16 லட்சம் பெண்  களை உறுப்பினர்களாக கொண்டது குடும்பஸ்ரீ என்னும் மூன்றடுக்கு அமைப்பு.

குடும்பஸ்ரீ
குடும்பஸ்ரீ என்பது கேரள உள்  ளாட்சித் துறையால் 1998 ஆம் ஆண்டு  வறுமை ஒழிப்பு நோக்கத்துடன் உரு வாக்கப்பட்டது. இந்த திட்டம் மாநில  வறுமை ஒழிப்பு இயக்கத்தால் நடத் தப்படுகிறது. நபார்டு வங்கியின் உத வியுடன் இந்த திட்டத்தை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. 1998 மே 17  அன்று மலப்புரம் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். உள்ளாட்சி அமைப்புகளில், வட்டார வளர்ச்சி சங்கங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுச் சங்கங்கள்  அடங்கியது குடும்பஸ்ரீ அமைப்பு. குடும்பங்களில் இருந்து 15 முதல் 40 வயதுக்கு உட்பட்ட தலா ஒரு பெண் கொண்ட அக்கம்பக்கக் குழுக்களை ஒருங்கிணைத்து உரு வாக்கப்பட்டுள்ளது. புதுமையான யோசனைகளின் அடிப்படையில் பொதுப் பங்களிப்புடன் செயல் படுத்தப்பட்ட சிறந்த பொதுச் சேவைத் திட்டத்திற்கான சர்வதேச தங்க விருதை குடும்பஸ்ரீ வென்றது. இவ்விருது பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்திற்கான காமன்வெல்த் சங்கம் நிறுவியதாகும். 119 நாடு களின் தயரிப்புகளுடன் போட்டி யிட்டு குடும்பஸ்ரீ இந்த விருதைப் பெற்றது.