தேனி, பிப்.7- புதுதில்லியில் நடைபெற்ற 74 ஆவது குடியரசு தின விழாவின் முப்படை ராணுவ அணிவகுப்பு பிரி வில் பங்கேற்ற மாணவிகளுக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் 74 ஆவது குடி யரசு தின விழா புதுதில்லியில் கடந்த மாதம் ஜனவரி 26 அன்று நடைபெற்றது. அந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் முப்படை ராணுவ பிரிவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி யின் தேசிய மாணவர் படையின் என்சிசி சார்பில் அஸ்மிதா மற்றும் கேசினி ஆகிய இரு மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற் றும் அந்தமான் நிக்கோபார் இயக்குநகரத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியின் கௌரவ காவ லராக லேண்ட்ஸ் கார்பரரலாக மற்றொரு மாணவி கேசினி தேர்ந் தெடுக்கப்பட்டார். தடைகளை சாத னைகளாக மாற்றி தனது நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரி யான செயல் திறன்களுக்காக அஸ்மிதா கவுரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மதுரை வந்த மாணவிகளை மதுரை தேசிய மாணவர் படை தள பதிகள், பாராட்டியதோடு இருவருக் கும் கல்லூரியின் சார்பாக மாணவ -மாணவிகள் எழுந்து நின்று அரங் கம் அதிர கைதட்டி வரவேற்றனர். பின்னர் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கலைக்கல்லூரியில் நடை பெற்ற பாராட்டு விழாவில், கல்லூரி முதல்வர் ஜேசுராணி, கல்லூரி செய லாளர் குயின்ஸ்லி ஜெயந்தி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பி னர் சரவணகுமார், பெரியகுளம் காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் கீதா, தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.