ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் கு.செல்வப்பெருந்தகை கோரிக்கை
சென்னை, செப். 17 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், மயிலாடுதுறை மாவட்டம், அடி யாமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்து, சாதி ஆணவப் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரி வித்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டாரத் துணை தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான வைரமுத்துவும் அதேபகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டு களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பெண்ணின் தாயார் மாற்று சாதியைச் சேர்ந்தவர். இதனால் தனது சாதியில் உள்ள அவருக்கு வேறு ஒருவருடன் மாலினிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளனர். இத்திருமணத்திற்கு இடையூறாக வைரமுத்து இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் அவரை அரிவா ளால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர் பெண்ணின் வீட்டார். ஏற்கனவே இக்காதல் விவகாரம் காவல்துறை வரைக்கும் சென்ற நிலையில் இப்படு பாதகச் செயலை செய்துள்ளனர். இச்சம்பவம் சமூக நீதிக்கும் மனித உரிமைக்கும் நேரடியான சவாலாகும். இதுவும் சாதிய ஆணவ படுகொலைதான் என்று கூறி யுள்ளார். இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிந்து கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறையை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.