திருவனந்தபுரம், நவ. 4- விரல் அசைவுகளின் மூலம் விரிவுரையின் ஒரு வரியைக் கூட தவறவிடாமல் பின்தொடர்ந்து பகிர்பவர்கள் சைகை மொழி விற்பன்னர் கள். திருவனந்தபுரத்தில் நடந்துவரும் ‘கேரளீயம்’ மேடைகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு மலை யாள மொழிபெயர்ப்பாளர்கள் பல இடங்களில் உள்ளனர். ஆனாலும், கேரளீயம் விழா விற்கு வந்தவர்களுக்கு சைகை மொழிபெயர்ப்பா ளர்களின் பணி புதிய அனு பவமாக இருந்தது. தாகூர் திரையரங்கம், சென்ட்ரல் ஸ்டேடியம், ஜிம்மி ஜார்ஜ் இன்டோர் ஸ்டேடியம், மாஸ்கெட், அசெம்பிளி ஹால், பல்கலைக்கழக வெளி அரங்கம் ஆகியவற்றில் சைகை மொழிபெயர்ப்பா ளர்கள் உள்ளனர். மைதா னங்களில் அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா என்பதன் அடிப்ப டையில் அல்ல, சைகை மொழியின் பொருத்தத்தை அனைவருக்கும் தெரிவிப்ப தையே முன்முயற்சியாகக் கொண்டு பணியாற்றினர். பொது மேடைகளில் சைகை மொழியை அறிமுகப் படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் கேரள இடதுஜன நாயக முன்னணி அரசாங் கத்தின் முடிவின் ஒரு பகுதியா கும். சமூக நீதித் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மொழிபெயர்ப்பா ளர்களின் சேவைகள், தேசிய பேச்சு மற்றும் கேட்டல் நிறு வனம் (நிஷ்) மூலம் கிடைக் கப்பெற்றது. நிஷின் ஆசிரியர் கள் மற்றும் முன்னாள் மாண வர்களான 18 பேர் சைகை மொழியைக் கையாளு கிறார்கள். அடுத்த நாள் நடைபெறும் கருத்தரங்குகளின் தலைப் புகள் குறித்து தன்னால் முடிந்த அனைத்து தகவல்க ளையும் முதல் நாளே சேக ரிக்க முயற்சிப்பதாக மொழி பெயர்ப்பாளர் சாண்ட்ரா தெரி விக்கிறார்.