கொல்கத்தா, ஜன.18- கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பயிற்சி மருத் துவரைப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக் கிப் படுகொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் குற்றவாளி என்று சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடுவதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் (31 வயது) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததும், கழுத்து நெரிக்கப்பட்ட தால் மூச்சுத் திணறி மருத்துவர் உயிரி ழந்திருப்பதும் உடற்கூராய்வு மூலம் தெரி யவந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மருத்துவர்கள், நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் தன்னார்வ லராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் ஆகஸ்ட் 10 அன்று கைது செய் யப்பட்டார். இவர் மீதான வழக்கு, மேற்கு வங்கத் தின் சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நவம்பர் 11 முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படை யில், முன்னதாக அக்டோபர் 7 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. தொடர்ந்து, ஜனவரி 9 வரை விசா ரணை நடைபெற்றது. இதில், 57 நாட்களில் 50 சாட்சிகளும், சுமார் 120 சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டன. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண் டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் சனிக்கிழமையன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி அனீர்பான் தாஸ் தீர்ப்பு வழங்கினார். அதில், “சிபிஐ முன்வைத்த ஆதா ரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப் பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. அவருக்கு எதிராக 11 ஆதாரங்கள் உள்ளதால், பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்ட னையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்ட னையும் இருக்கும்; தண்டனை விவரங்கள் ஜனவரி 20 அன்று (திங்கட்கிழமை) வெளி யிடப்படும்” என்று அறிவித்தார்.
ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்யாதது ஏன்? குற்றவாளி சஞ்சய் ராய் கேள்வி
முன்னதாக, தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, அதனைக் கேட்ட சஞ் சய் ராய், “நான் தவறுதலாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டு விட்டேன், இதனை நான் செய்யவில்லை. உண்மையில் இதனை செய்தவர்களை விட்டுவிட்டார் கள். இதில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொடர்பிருக்கிறது” என்று உரக்க கூறிய தாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. “நான் எப்போதும் என் கழுத்தில் ருத்திராட்சம் இணைக்கப்பட்ட சங்கிலி யை அணிந்திருப்பேன். ஒருவேளை இந்தக் குற்றத்தை நான் செய்திருந்தால், அங்கேயே என் செயின் அறுந்து விழுந் திருக்கும். ஆனால் அப்படி நடக்க வில்லை. இந்தக் குற்றத்தை என்னால் செய்திருக்க முடியாது” என்றும் அவர் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல தீர்ப்பு வெளியானதும், ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவர் கள் சிலரும்,” மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் நடந்ததும் ஆதாரங்களையும் சாட்சிகளையும் அழித்துள்ளது. இந்த சஞ்சய் ராயைக் காப்பாற்றவா இதனைச் செய்தது. இதில் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கிறது. அதனைக் கண்டு பிடிக்க வேண்டும்” என்று ஏஎன்ஐயிடம் பேட்டி அளித்துள்ளனர்.