பி.ராகவன் நகர்/கொச்சி, மார்ச் 4- கொச்சியில் வெள்ளியன்று (மார்ச் 4) நிறைவடைந்த கேரள மாநில மாநாட்டில் கொடியேரி பாலகிருஷ்ணன் மாநில செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். இதனை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அறிவித்தார். 70 வயதான கொடியேரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், தேசாபிமானி பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். மாநாட்டில் 88 பேர் கொண்ட மாநிலக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 17 பேர் கொண்ட மாநில செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் எட்டு பேர் புதுமுகங்கள். பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், இ.பி. ஜெயராஜன், டி.எம்.தாமஸ் ஐசக், பி.கே.ஸ்ரீமதி, ஏ.கே.பாலன், டி.பி.ராம கிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், கே.கே.ஜெயச்சந்திரன், ஆனாவூர் நாகப்பன், வி.என்.வாசவன், சாஜி செரியன், எம்.சுவராஜ், முகமது ரியாஸ், பி.கே.பிஜூ, புத்த லத்து தினேசன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக 175 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வி.எஸ்.அச்சு தானந்தன், ஆனத்தல வட்டம் ஆனந்தன், எம்.எம்.மணி, பி.கருணா கரன், வைக்கம் விஸ்வன், ஜான் பிரிட்டாஸ் எம்.பி, விஜூ கண்டக்கி ஆகி யோர் மாநிலக்குழுவின் சிறப்பு அழைப் பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். எம்.சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட கட்டுப்பாட்டுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநிலக்குழுவில் 16 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். எம்.எம்.வர்கீஸ், ஏ.வி.ரஸ்ஸல், இ.என்.சுரேஷ்பாபு, சி.வி.வர்கீஸ், பனோலி வாட்சன், ராஜூ ஆபிரகாம், ஏ.ஏ.ரஹீம், வி.பி.சானு, டாக்டர். கே.என்.கணேஷ், கே.எஸ்.சலீகா, கே.கே.லத்திகா, பி.சசி, கே.அனில்குமார், வி.ஜாய், ஓ.ஆர்.கெல்லு, டாக்டர். சிந்தனை ஜெரோம் ஆகியோர் புதியவர்கள். 12 பேர் மாநிலக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பி.கருணாகரன், வைக்கம் விஸ்வன், ஆனந்தலவட்டம் ஆனந்தன், கே.ஜே.தாமஸ், எம்.எம்.மணி, எம்.சந்திரன், கே.ஆனந்த கோபன், ஆர்.உன்னிகிருஷ்ண பிள்ளை, ஜி.சுதாகரன், கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர், சி.பி.நாராயணன், ஜேம்ஸ் மேத்யூ ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களாவர். மாணவர் இயக்கம் மூலம் பொதுவாழ்வுக்கு வந்த கொடியேரி, சிறந்த அமைப்பாளர் மற்றும் அசாதா ரண தலைமைத்துவத்தால் குறிப்பிடத் தக்கவர். நாடாளுமன்ற அரங்கிலும், சிறந்த நிர்வாகியாகவும் தன் திறமையை நிரூபித்தவர் கொடியேரி. கட்சி செயலாளராக சிறப்பாக பணியாற்றி யவர். கட்சியை ஒற்றுமையாக முன்னோக்கி கொண்டு செல்வதிலும், எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள் வதிலும், வலதுசாரி ஊடகங்களின் பொய்களை அம்பலப்படுத்துவதிலும் அவர் தனது திறமையை வெளிப் படுத்தி வந்துள்ளார்.