சென்னை, ஜூலை 3- சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட வர்களில் 99 விழுக்காட்டினர் பேர் நலமாக உள்ளனர் என்று மருத்துவ மனை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அரசு ராயப் பேட்டை மருத்துவமனையின் மருத் துவ அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் உதவியுடன் 28 ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப் பட்டு மாதம் 115 சிறுநீரக நோயா ளிகள் தொடர் ரத்த சுத்திகரிப்பு முதல மைச்சர் காப்பீட்டுதிட்டம் மூலம் பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 2 டயாலிசிஸ் கரு விகள் உள்ளன. இந்த துறையில் இதுவரை 85 க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (உறவு முறை மட்டும்) வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, மேலும் மாற்று ரத்த வகை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 2 பேருக்கு வெற்றிகரமாக செய்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் இறப்புக்கு முன் சிறுநீரக தானம் பதிவு செய்யப்படுகிறது. அதில் கிடைக்கும் சிறுநீரகத்தை கொண்டு நோயாளிகளுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, சிறுநீரக நோய் பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றை செய்து கொள்ள அரசு ராயப்பேட்டை மருத்துவமனையை பொது மக்கள் அணுகலாம். சமீபத்தில் 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடத்தப்பட்டு தற்போது அச்சிறுவன் பள்ளிக்கு செல்கிறான். இவ்வாறு அவர் கூறினார்.