tamilnadu

img

தியாகச்சுடர்களுக்கு கேரளம் வரவேற்பு

ஆலப்புழா பெரிய சுடுகாடு தியாகிகள் மண்டபத்தில் இருந்து விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டு நகரில் ஏற்றி வைக்கும் கொடியை தேசிய துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பயணக்குழுத் தலைவர் எம்.விஜயகுமாரிடம் ஒப்படைத்தார்.

பாலக்காடு, டிச.10- அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் (ஏஐகேஎஸ்) 35ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான தியாகச்சுடர் ஊர்வலம் சனியன்று (டிச.10) கேரளத்தில் நுழைந்  தது. மதியம் 12 மணிக்கு பாலக்காடு மாவட்டம் வாளையார் எல்லையில் ஊர்வ லத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 35  விளையாட்டு வீரர்கள் 35 புல்லட் இருசக்  கர வாகனங்களில் அணிவகுத்து தியாகச்  சுடர் ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்  பட்டது. விவசாயிகள் சங்க அகில இந்திய  இணைச் செயலர் விஜு கிருஷ்ணா தலை மையில் தமிழகத்தின் கீழவெண்மணியிலி ருந்து கொண்டுவரப்படும் தியாகிகள் சுட ரும், நிதிச் செயலர் பி.கிருஷ்ணபிரசாத் தலைமையில் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்ட தியாகிகள் சுடரும் சேலத்தில் சங்கமித்து வாளையாறு வந்தடைந்தன.  வாளையார் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மாலை 5 மணிக்கு பாலக்காடு மைதா னத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு திருச்சூரில் வரும் 13ஆம் தேதி  முதல் 16ஆம் தேதி வரை நடக்கிறது. வரும் 13ஆம் தேதி தோழர் கே.வரதராசன் நகரில்  பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது. 16ஆம் தேதி மாலை தேக்கின்காடு மைதா னத்தில் உள்ள கோடியேரி பாலகிருஷ்  ணன் நகரில் ஒரு லட்சம் பேர் பங்கேங்ற கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக் கிறார்.