கோயம்புத்தூர், நவ.27- காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில், அரசு செலவில் இந்துத்துவா கருத்து களை மாணவர்களிடம் புகுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஞாயிறன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காசி தமிழ் சங்கமம் எனும் பெயரில் சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒன்றிணைந்து மதவாத கருத்தியலை பரப்பும் சூழ்ச்சி களை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், மோடி அரசின் சதி திட்டமான காசி தமிழ் சங்கமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஞாயிறன்று போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற போராட்டத் திற்கு மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார். இதில், மாவட்ட செய லாளர் அசாருதீன், மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் கண்ணன், சந் தோஷ், கௌசல்யா, ஆசாத், ஹாரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.