மதுரை மேலமடையில் உள்ள தாத்தா வீட்டிற்கு கண்ணன் விடுமுறையில் சென்றான். தாத்தா அவனை மகிழ்ச்சியோடு வரவேற்றார். பாட்டி அவனுக்கு பலகாரம் சுட்டு தந்தார். கண்ணன், தாத்தா வீட்டிற்கு அருகிலுள்ள நண்பர்களுடன் விளையாடினான். மாலை வீட்டிற்கு கிளம்புவதற்குத் தயா ரானான். அப்போது, கண்ணன் தாத்தாவிடம் தன் வகுப்பு நண் பர்கள் புதிய சாப்பாட்டுக் கூடை வைத்திருப்பதாக கூறினான். தனக்கும் புதிய கூடை வேண்டும் என்றான். தாத்தா வீட்டின் பரணி மேலி ருந்து வயரில் பின்னிய கூடை ஒன்றைக் கொடுத்தார். அந்தக் கூடை அழுக்காக இருந்தது. “தாத்தா! என் நண்பர்கள் டோரி மான், ஷின் சான், ஸ்பைடர் மேன், அட்டோரி படங்கள் போட்ட கூடை களை வைத்திருக்கிறார்கள். இந்தக் கூடையில் அப்படி எதுவும் படம் இல்லை.” என்று கூறினான். தாத்தா அதற்கு இது என்னு டைய அப்பா பயன்படுத்தியக் கூடை. இதை நான் பயன்படுத்தி னேன். இப்போது, உனக்கு தரு கின்றேன். இந்த கூடையைப் பத்திர மாக பயன்படுத்து. இந்தக் கூடை வலுவானதாகவும், அழகானதாக வும் உள்ளது. “என்றார். கண்ணன் கூடை அழுக்காக உள்ளதாக குறை கூறினான். அங்கு வந்த பாட்டி அவனிடம் அந்தக் கூடையை பயன்படுத்தி , தோட்டடத்தில் உள்ள ரோஜா செடிக்குத் தண்ணீரைப் பிடித்து ஊற்ற கூறினாள். கண்ணன் ஆச்சரியமாக பாட்டியை பார்த் தான். கூடையின் ஓட்டை வழியாக தண்ணீர் கீழே விழுந்து விடும் அல்லவா என்று கூறினான். தாத்தா அதற்கு நீ தண்ணீரை முகர்ந்து வரும் பொழுது ஓட்டை வழியாக தோட்டத்தில் உள்ள பிற செடிகளுக்கு நீர் செல்லும். எஞ்சிய நீரை ரோஜா செடிக்கு ஊற்றலாம் என்றார்..
கண்ணனும் தாத்தாவின் பேச்சைக் கேட்டு தோட்டத்துக்குச் சென்றான். தோட்டத்தில் இருந்த தொட்டியில் நீரை முகர்ந்து ஓடி னான். ரோஜா செடியை அடை வதற்கு முன்னால் தண்ணீர் முழு வதும் தீர்ந்து போனது. மீண்டும் ஓடிச் சென்று கூடையில் நீரை பிடித்தான். அவன் ஓடி வரும் பொழுது வழியில் இருந்த கத்த ரிக்காய், தக்காளி, மிளகாய், வெண்டைக்காய் செடிகளுக்கு நீர் பாய்ந்தது. இந்த முறையும் ரோஜா செடிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மீண்டும் ஓடி சென்றான். இப்படியே பலமுறை முயன்று தோல்வியுற்றான். இறுதி யில் அந்த கூடை முழுவதும் நீரை நிரப்பி கொண்டு வேகமாக ஓடி னான். இறுதியில் ரோஜா செடிக்குத் தண்ணீர் ஊற்றி வெற்றி பெற் றான். பின்பு, தாத்தாவிடம் வந்தான். அப்போது தாத்தா சிரித்துக் கொண்டே கூடையைப் பெற்று ஈரத்தை துடைத்தார். இப்போது கூடை பளபளவென்று புதிய குடை யாக மின்னியது. அந்தக் கூடை யில் வாத்து படம் போடப்பட்டி ருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. கண்ணனைக் கவர்ந்தது.
“ தாத்தா! கூடை அழகாக இருக்கிறது. நான் வைத்துக் கொள்கிறேன்.” என்றான். பாட்டி அவனிடம் வந்து நாம் நம்மிடம் உள்ள பழைய பொருட்களை பயன்படுத்த வேண்டும். அது பழைய பொருள் என்பதால் அதனை பயன்படுத்தாமல் வைத்தி ருக்கக் கூடாது. நாம் பேராசையில் புதிது புதிதாகப் பொருட்களை வாங்கி வீட்டில் குப்பைகளைச் சேர்க்கக்கூடாது. இருக்கும் பொருட்களை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். இருப்பதை வைத்து வாழ்வது மகிழ்ச்சி தரும் என்று சிரித்தாள். “வாழ்க்கையும் இப்படித்தான் மந்தமாக , சோம்பலாக ஒரு பழைய பொருளைப் போல நமக்கு தெரியும். அதைபற்றிக் கவ லைப்படக்ககூடாது. நேர்மறை எண்ணங்களுடன் வாழ பழகி னால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.” என்றார். கண்ணனும் மகிழ்ச்சியுடன் அந்த வாத்து கூடையை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.