சென்னை, அக். 5 - சட்ட உரிமைகளை பறிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதர வாக பேசும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை திரும்ப பெறக்கோரி வியா ழனன்று (அக்.5) மாநிலம் முழுவதும் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராள மான பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சட்ட விரோதமாக தொழிலாளர்களின் உரிமைகளை இந்நிறுவனங்கள் பறித்து வருகின்றன. காஞ்சிபுரம் வல்லம் சிப்காட்டில் யுனி பிரஸ் என்ற ஜப்பான் நிறுவனம் முன்பு வைக்கப்பட்ட சிஐடியு கொடி, பெயர் பலகையை புல்டோசர் வைத்து அகற்றியது. அதே இடத்தில் மீண்டும் சிஐடியு கொடியேற்றியது. இதனால் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நோபிள் டெக், நோக்கியா போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. பண்டிகை விடுப்பு, ஊதிய உயர்வு போன்ற சட்ட சலுகை களை கேட்டு போராடுகிற தொழி லாளர்களுக்கு எதிராக, காஞ்சிபுரம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்படுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக, வடமாநில, தமிழக தொழிலாளர்கள் என பிரித்து பேசி பகைமையை உருவாக்குகிறார். எனவே, மாவட்ட ஆட்சியரை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு வடசென்னை, மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சி. திருவேட்டை தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் லெனின் சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி உள்ளிட் டோர் பேசினர். கைது தென்சென்னை மாவட்டம் சார்பில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழி லாளர் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், மாவட்ட தலைவர் இ.பொன்முடி, செயலாளர் பா.பால கிருஷ்ணன், பொருளாளர் ஏ.நட ராஜன் உள்ளிட்டோரை காவல்துறை யினர் கைது செய்தனர்.