மதுரை,அக்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று, கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை திருவாரூர்,காரைக்குடி வழியாக இயக்க ரயில்வே வாரியத்துக்கு பொது மேலாளர் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புவருமாறு: தாம்பரம்- செங்கோட்டை இடையே திருவாரூர், காரைக்குடி வழி யாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் விட பொது மேலாளர், ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர், காரைக்குடி பிரிவில் விரிவுபடுத்த என் கோரிக்கை யை ஏற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் செய்துள்ள இந்த பரிந்து ரையை வரவேற்கிறேன். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் விரைவு ரயில் திருவாரூருக்கும் காரைக்குடிக்கும் இடையே மீண்டும் இயக்க நான் ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு ரயில்வேபொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன்.
மக்கள் கோரிக்கையை நான் அவருக்கு தெரிவித்தேன். பொது மேலாளர் செப்டம்பர் 26 தேதியிட்ட பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். அதில் தாம்பரத்துக்கும் செங்கோட்டைக் கும் இடையே திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை ஒரு புதிய ரயிலை இயக்க கால அட்டவணை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. ரயில்வே கால அட்டவணை குழு இதனை கால அட்டவ ணையில் சேர்க்க ஏற்பாடு செய்யும் என்று பதில் அளித்துள்ளார். ஏற்கனவே தீபாவளிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து இதே வழியாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க பொது மேலாளர் அனு மதி அளித்துள்ளார். என் கோரிக்கையை ஏற்று இந்த புதிய ரயிலை இயக்க ஏற்பாடு செய்த பொது மேலாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த கோரிக்கையை என்னிடம் கொண்டு வந்த பொது மக்களுக்கும் இயக்கங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.