tamilnadu

காமராசர் பல்கலை கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்காதது மனிதத்தன்மையற்ற செயல் பல்கலை.பாதுகாப்புக்குழு கண்டனம்

மதுரை, ஜூலை 2- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இயங்கி வரும் அருப்புக் கோட்டை, திருமங்கலம்,வேடசாந்தூர், சாத்தூர், அழகர்கோவில் சாலை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 400 க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததை மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு வன்மையாகக் கண்டிதுள்ளது. இது குறித்து அமைப்பின் தலைவர் சீனிவாசன், செயலாளர் இரா.முரளி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: அரசின் உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகம் காத்திராமல் உடனடியாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க துனைவேந்தர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே பல்கலைக் கழக மான்யக் குழு அளிக்க விதித்துள்ள 50,000 ரூபாய் குறைந்த பட்ச ஊதி யத்தை வழங்காமல் 15,000 ரூபாய் மட்டுமே ஊதி யம் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது மனிதத்தன்மையற்ற செயலா கும். ஊதியத்தை உடனடியாக வழங்கிவிட்டு பின்னர் ஆட்சிக்குழுவின் ஒப்புதலைப் பெற வழிவகை உள்ளது. நிதிக்குழுவும் ஆட்சிக்குழுவின் அதிகா ரத்திற்குட்பட்டது என்பதால் துணை வேந்தர் மேலும் ஆசிரியர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.
கல்லூரி மாணவர் சேர்க்கை
கொரோனா காலத்தில் அரசின் விதிகளை மீறி ஆன் லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய வழி மாணவர் சேர்க்கை ஏழை-எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.