சென்னை, ஜூன் 5- காயிதே மில்லத்தின் 128ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்திலுள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி னார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். ஆட்சிமொழிப் பிரச்சனையில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக் காவலர். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்குச் செல் வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர். அரசியல் நிர்ணய அவை உறுப் பினராகவும், நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காக வும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா. இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது என்று அவரது மறைவின்போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம் - கண்ணியமிகு ‘காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயிலின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவு கூர்ந்து போற்றுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் அசன் மௌலானா மற்றும் செஞ்சி மஸ்தான், மதிமுக கட்சியிலிருந்து மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள்.