திருச்சிராப்பள்ளி, மே 1- தேவேந்திரகுல சமூக பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் மாபெரும் பட்டியல் சமூகப் பாதுகாப்பு மாநாடு ஞாயிறன்று திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவன தலைவர் பொன் முருகேசன் தலைமை வகித்தார். தேவேந்திர சமூக பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மு.ஊர்காவலன், மலையப்பன், இள மான் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளர், பண்ணாடி, காலாடி உள்ளிட்ட 7 உட்பிரிவை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த வர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றக்கூடாது. எஸ்சி பட்டியல் இழிவு அவமானம் என பொது மேடை களில் பேசும் சமுதாய தலைவர்களை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தனித் தொகுதியில் போட்டியிட அனு மதிக்கக் கூடாது. எஸ்சி தேவேந்திர குல வேளாளர் மக்களின் வளர்ச்சியை தடுக்கும் அரசு ஊழியர்களை ஆய்வு செய்து அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய 5 துறை களை வழங்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கும், பறையர் சமூக மக்க ளுக்கும், அருந்ததியர் சமூக மக்க ளுக்கும் தமிழ்நாடு ஆட்சி அதிகாரத்தில் அதாவது துணை முதல்வர் பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
திட்டங்கள் பற்றிய விளம்பரங்கள் செய்க!
பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரசு அறிவிக்கும் வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு வகையான திட்டங்களை பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அரசு செலவில் மாதம் 5 முறை செய்தித்தாள்களிலும், ஊடகத்திலும் அரசு விளம்பரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்கள் தாட்கோ மூலம் தொழில் கடன் பெற தாட்கோ தனி வங்கிகள் மாவட்டம் தோறும் தொடங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக காலியாக உள்ள பின்னடைவு எஸ்சி/எஸ்டி அரசு பணியிடங்களை போர்க்கால அடிப்படை யில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கம் மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும். நிலம் இல்லாத எஸ்சி/எஸ்டி ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கிட வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா கிராம, நகர்ப்புற, மாநகராட்சி உட்பட அனைத்துப் பகுதிகளில் வசிப்பவர் களுக்கும் வழங்கிட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக/பொருளாதார கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், பாஜக, ஆர்எஸ்எஸ் மோச மான வன்முறை அரசியலை முன் னெடுக்கிறார்கள். அதையே அவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என தெரியவில்லை. பட்டியல் சாதி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு அவர்கள் முயற்சிக்கிறார்கள். முதலில் இந்த வலையில் தங்கராஜ் என்பவர் விழுந்தார். அதன் பின்பு தற்போது ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி வலையிலே விழுந்து கிடக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா முழுவதும் எதிரொலித்த வார்த்தை ‘தலித் மக்களின் அரசியல் உரிமை’ என்பதாகும். எது உண்மை யான மரியாதையை கொடுக்க முடியும்? சாதி ஒழிப்பு தான் உண்மையான மரியாதையை கொடுக்க முடியும். சாதி அரசியலில் இருந்து எல்லாரும் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அனைவரும் விடுவித்துக் கொள்ள வேண்டும். இது போன்ற மாநாடு தமிழகத்தில் சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடைபெற வேண்டும். அதன் மூலமாகத்தான் ஆர்எஸ்எஸ்-க்கு, பாஜக-விற்கு, பார்ப்பனியத்திற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என கூறினார். இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் சு.க.முருகவேல் ராஜன், ‘மே 17 இயக்கத்தின்’ தலைவர் திருமுருகன் காந்தி, மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசை தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் கார்த்திகேயன், சமத்துவ இந்து மக்கள் கட்சி தலைவர் அல்லூர் சீனிவாசன், எஸ்சி/எஸ்டி கூட்டமைப்பின் ஒன்றிய, மாநிலத் தலைவர் கருப்பையா, முன்னாள் மாவட்ட நீதிபதி பால்ராஜ், முன்னாள் நீதிபதி ராம்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கார்த்திக் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.