tamilnadu

img

சனாதனம் ஒழியட்டும், சமதர்மம் வெல்லட்டும்!

சென்னை, செப். 2 -  சனாதனம் ஒழியட்டும், சமதர்மம் வெல்லட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனிக் கிழமையன்று (செப்.2) சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ‘சனாதனத்தின் கொடிய வரலாறு’ எனும் தலைப்பில் கி.வீரமணி பேசியதன் சுருக்கம் வருமாறு: மனிதகுலத்திற்கு எதிரானது சனாதனம். சனாதன எதிர்ப்பு மாநாடு என்றில்லாமல்,  ஒழிப்பு மாநாடு நடத்துவது பாராட்டுக்குரியது. ஒரேநாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே மொழி என்பவர்கள் ஒரே சாதி என்று கூற மறுக்கின்றனர். ஏனெ னில் அவர்களை சனாதனம் என்கிற இந்துந் துவம் இயக்குகிறது. தற்போது, நிரந்தர மாக ஆட்சிப் பெறுப்பில் அமர ஒரே  தேர்தலை கொண்டு வர முயற்சிக்கின் றனர். சனாதனம் என்றாலே அது இந்து மதம்தான். சனாதனத்திற்கு வேதங்கள் மூலமாக உள்ளது. சாதி மதத்தை காட்டி மக்களை பிரிக்கிறார்கள். கல்விதான் நமக்கு கண்ணொளி. கொழுத்த குதிரை, மதம்பிடித்த யானை, படித்த சூத்திரன் மிகவும் ஆபத்தானது என்கிறது மநுநீதி. எனவே, கீழே இருப்பவர்கள் படிக்கக் கூடாது, மருத்துவர், பொறியாளர் ஆகக் கூடாது என்கிறது மநுநீதி. எனவே, சமத்துவத்திற்கு எதிரான சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் சமூக நீதி. மனிதநேயம், சமத்துவம் மல வர்ணாசிரமம் ஒழிக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு புதிதாக விஸ்வகர்மா என்றொரு குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள் கையை உருவாக்கி, அதை பகுதிபகுதி யாக அமல்படுத்துகிறது. அதன் ஒரு பகுதிதான் விஸ்வகர்மா திட்டம். இதை அனுமதிக்க முடியாது. சனாதன ஒழிப்பு  மாநாடு சரியான நேரத்தில் எழுப்பப் பட்டுள்ள போர்க்குரல். இது தொடர்ந்து ஒலிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இந்தியா’ அணியை உருவாக்கி 3 கூட்டங் களை நடத்திவிட்டனர். இது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கூட்டணி வெல்லும். நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு மக்களும், தலைவர்களும் தயா ராகி விட்டனர். இதேபோன்ற ஒரு சனாதன ஒழிப்பு கூட்டணியை கலாச்சார ரீதியாக, அறி வியல் ரீதியாக உருவாக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த  அடிப்படையை ஏற்றுக்கொள்கிற அனை வரையும் ஒன்றிணைக்க வேண்டும். தேர்த லை பற்றி மட்டுமல்லாமல், அடுத்த தலை முறை குறித்தும் சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப சனாதன ஒழிப்பு கூட்டணியை உருவாக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். இந்த பெரும்போருக்கு ஆயுதங்களாக பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் உள்ளனர். சனாதனம் ஒழியட்டும், சமதர்மம் வெல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.