சென்னை, ஜன. 22- உலக நிதி மூலதன சூதாட்டம் ஓய்வூதியத்தை சூறையாடுகிறது என்று சென்னை நடைபெற்ற மாநாட்டில் கே.சுவாமிநாதன் தெரிவித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சென்னையில் ஞாயிறன்று (ஜன. 22) சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன் பேசுகையில், ஓய்வூதியப் பிரச்சனை என்பது மாநிலம் தழுவியது மட்டுமல்ல, தேசம் தழுவி யது, உலகம் தழுவியது. இதற்கெதி ரான கோபம் உலகம் முழுவதும் வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் உள்ளிட்டு இந்தியாவின் பல மாநிலங்க ளில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றார். அவர் மேலும் பேசியதாவது:
பிரான்சில் பற்றி எரியும் போராட்டம்
பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கொண்டு வந்துள்ள ஓய்வூதிய சீர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டின் தலைநகர் பாரிஸ் உள்பட எல்லா பெருநகரங்கள், சிறு நகரங்க ளில் கடந்த 19ஆம் தேதி 20 லட்சத்திற் கும் மேற்பட்டோர் வீதிகளில் அணி வகுத்தனர். இந்த பிரச்சனை எப்படி உலகம் தழுவிய, தேசம் தழுவிய வலைப்பின்னல் கொண்டதாக உள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இந்த போராட்டம். ஓய்வூதியம் உலகம் தழு விய பிரச்சனையாக இருப்பதற்கு நவீன தாராளமய பொருளாதாரமே காரணம். பைனான்ஸ் கேபிட்டல் என்று கூறப்படும் நிதி மூலதனம் என்பது ஒட்டுமொத்த சூதாட்டக்களமாக மாற்றப்பட்டிருக்கி றது. பன்னாட்டு மூலதனம் லாப வெறியோடு பாதுகாக்கப்பட்ட சேமிப்பு வடிவங்களை எல்லாம் அடித்து நொறுக்கி உலகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி என்பது இன்னொரு உலக நிதி நெருக்கடிக்கு அழைத்துச் செல்லும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறுகிறார். கிரிப்டோ கரன்சி என்பது 100 விழுக்காடு சூதாட்டம் என்றும் அவர் கூறுகிறார். ஒருகாலத்தில் சிவகாசி யில் ரூபாய் நோட்டு அடித்தால் அது கள்ளநோட்டு என்று கூறப்படும். தனியார்கள் ரூபாய் அச்சடித்தால் என்று நடக்குமோ அதுதான் கிரிப்டோ கரன்சி எனும் வடிவமாக நிதி உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். கிரிப்டோ கரன்சியை தடை செய்ய வேண்டும் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆனால் அந்த மசோதா இதுவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறினாலும், ஆட்சி யாளர்கள் தடை செய்யலாமா அல்லது முறைப்படுத்தலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சூதாட்டம்
முன்பெல்லாம் சிறியளவில் சீட்டு (சூதாட்டம்) கிளப்புகள் இருக்கும். அப்படிப்பட்ட சின்ன சின்ன சீட்டு கிளப்பு கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. மாறாக நிதி உலகையே அச்சுறுத்துகிற மிகப்பெரிய சீட்டு கிளப்புகள் உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போது, ஆட்சியாளர்கள் நீங்கள் எல்லாம் நல்ல ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வேண்டாமா? என்று சாதாரண மக்கள் மீது கருணை காட்டு வது போல் பேசுகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய 65 விழுக் காடு மக்களைக் கொண்டிருக்கக் கூடிய 44 நாடுகளில் அமல்படுத்தப் படும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த ஆய்வை மெர்சர் இண்டெக்ஸ் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்கி றது. ஓய்வூதியம் போதுமான அளவில் இருக்கிறதா? அந்த திட்டங்கள் நீடித்து இருக்க முடியுமா? நம்பகத்தன்மை யோடு அந்த திட்டங்கள் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படு கிறது. அந்த 44 நாடுகளில் இந்தியா 41ஆவது இடத்தில் உள்ளது.
சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறி
எதிர்காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுடைய சமூகப் பாதுகாப்புக்காகவும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குரல் கொடுக்க வேண்டும். நாம் வைக்கும் கோரிக்கைகளுக்கு எதிராகச் சாதாரண மக்களைத் திருப்பி விடுகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் 23 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக் கும். புதிய ஓய்வூதிய திட்டத்தில் 12 லட்ச ரூபாயில், ஓய்வு பெறும் போது 7 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு, மீதமுள்ள 5 லட்ச ரூபாயை ஓய்வூதி யத்தில் முதலீடு செய்தால், ஒரு லட்சத்திற்கு 523 ரூபாய் வீதம் கணக் கிட்டு 5 லட்ச ரூபாய்க்கு 2,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கை இதுவரை ஆட்சி யாளர்கள் மறுக்கவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2,500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் என்றால், பழைய ஓய்வூதிய திட்டத் தின் படி 23 ஆயிரம் ரூபாய் பெற வேண்டும் என்றால் 1 கோடியே 17 லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இது எவ்வளவு பெரிய மோசமான செயல். சமூகப் பாதுகாப்பையே இந்த அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஆட்சியாளர்கள் எப்போதும் இதை ஒரு நிதிச்சுமை என்றுதான் கூறுகிறார் கள்.
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் மு.அன்பரசு, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநிலத் தலைவர் நா.ராஜேந்திரன் ஆகியோர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில், அஞ்சல் துறை மூன்று மாநிலத் தலைவர் ஏ.வீரமணி, அகில இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கூட்டமைப்பின் துணைத் தலைவர் ெஜ.காந்திராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் எம்.துரைபாண்டியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.வெங்க டேசன் வரவேற்றார். அரசு ஊழியர் துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி நன்றி கூறினார்.