tamilnadu

img

ஏகோஜி மகாராஜபுரத்தில் 10 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 15 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் ஒன்றியம், மாதானம் அருகே யுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி  மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க  இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தலைமையில் 10 ஆவது நாளான  திங்களன்றும் போராட்டம் தொடர்ந் தது.  ஏகோஜி மகாராஜபுரம், மேலத்தெருவில் வசிக்கும் பட்டியலின  மக்கள் பல ஆண்டுகளாக குடியிருக்க  இடம் கேட்டு அரசு துறையிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,  எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் விரக்தியடைந்த அவர்கள் அதே பகுதியில் உள்ள 3.5 ஏக்கர்  பரப்பளவிலான இடத்தை 45 குடும்பங் களுக்கு பிரித்து தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அந்த  இடத்தில் குடிசை அமைத்து குடியே றும் போராட்டத்தை ஜூலை 6 அன்று  முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் பி.சீனிவாசன் தலைமை யில் இரவு, பகலாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய  செயலாளர்கள், ஒன்றியக் குழு உறுப் பினர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் 8  ஆவது நாளான திங்களன்றும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.