tamilnadu

img

அந்த பதினெட்டு பெண்களுக்குத்தான் எத்தனை அச்சுறுத்தல்... மிரட்டல்!

வாச்சாத்தி வழக்கை வழக் கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர்.வைகை, கே.இளங்கோ, ஜி.சம்கிராஜ், கே.சுப்பு ராம் ஆகிய 5 பேர் கொண்ட குழு நடத்தி யது. வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக் கின் தீர்ப்பையொட்டி வழக்கறிஞர் கே. இளங்கோ வாச்சாத்தி வழக்கை சுருக்க மாக விவரிக்கிறார்: ‘‘காவல்துறை, வனத்துறை, வரு வாய்த்துறையை சேர்ந்தவர்கள் 20.6.1992 முதல் மூன்று நாட்கள் வாச் சாத்தி கிராமத்தில் நடத்திய கொடுமை களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. குறிப்பாக 18 பெண்கள் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளை அடித்து நொறுக்கினர். சாப்பாட்டிற்கு வழி யில்லாமல் செய்தனர். ரேசன் கடை சூறையாடப்பட்டது. ஆயில் என்ஜினை உடைத்தனர். ஆடுமாடுகளை கொன்ற னர். கோழிகளை அடித்து அங்கேயே 3 நாள் சமைத்து சாப்பிட்டனர். ரேசன் கடையில் இருந்த மண்ணெண்ணெய் யை எடுத்து கிணற்றில் கொட்டினர். கிராம மக்களை மாவட்ட வன அலு வலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, ஊர் பெரியவரையும், ஒரு  பெண்ணையும் நேர் எதிரே நிர்வாண மாக நிற்க வைத்தனர். அந்த பெண்ணி டம் துடைப்பம் கொடுத்து, ஊர் பெரி யவரை அடிக்க வைத்தனர். அரசு அதி காரிகள் சாப்பிட்ட மிச்சம் மீதியில் தண் ணீர் ஊற்றி, எச்சில் துப்பி அதை மக்க ளை சாப்பிட வைத்தனர். கும்பல் பாலி யல் வன்புணர்ச்சியின் போது தப்பித்து ஓடிய பெண்களின் பாவாடைக்குள் தேள் விடுவது போன்ற ஏராளமான கொடுமைகளை செய்தனர்.

உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை, உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி உயர்நீதிமன்றம் விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்சி, எஸ்டி ஆணையர் வாச்சாத்தியை ஆய்வு செய் தார். இதனைத்தொடர்ந்து சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண் டும். அதிகாரிகள், அரசியல்வாதிகள், கடத்தல்காரர்கள் கூட்டணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. ஆனால், உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. குற்றவாளிகள் 269 பேரையும் நிற்க வைக்க நீதிமன்றத் தில் இடமில்லை. அதனால் புதிதாக ஒரு கட்டிடம் கட்டினார்கள். குற்றவாளிகள், சாட்சி சொல்ல வருகிறவர்களுக்கு இடையூறு செய்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு, வாகன வசதி, வழக்கிற்கு வந்து செல்ல படி (பேட்டா) வாங்கி கொடுத்தோம். சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் பெற்றுத்தந்தோம்.

அடையாள அணிவகுப்பு நடை பெறும் போது ஒரு நபருடன் 6 பேரை கலந்து நிற்க செய்வார்கள். 269x6 பேர் ஒன்றாக கூடி நிற்கும்போது, அந்த 18 பெண்களுக்கு எவ்வளவு அச்சுறுத்தல் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். முதன்முறையாக சேலம் சிறையில் நடைபெற்ற அடை யாள அணி வகுப்பின்போது, கலவரம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக இன்னொரு மனு போட்டு, தலைமை நீதிபதி தலை மையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் கள், குற்றவாளிகளை அடையாளம் காட்டினர். இவையெல்லாம் முடிந்து சம்பவங்கள் நடந்து 19 வருடங்களுக்கு பிறகு 2011ல் தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அவற்றையெல்லாம் விசாரித்த நீதிபதி வேல்முருகன் 2023 செப்டம்பர் 29 அன்று மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளு படி செய்து நீதி வழங்கியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். அரசு இயந்திரத்தின் கொடூரமான அடக்குமுறைக்கு எதிராக 31 ஆண்டு களாக நடந்த வழக்குகளில் பல்வேறு தருணங்களில் சிறப்பாக வாதாடி குற்ற வாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த வழக்கறிஞர் குழுவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரு கின்றனர். நீதியை பெற்றுத்தந்த வழக்க றிஞர் குழுவிற்கும், விசாரணை மேற் கொண்ட அதிகாரிகள், நீதிபதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் பாராட்டு தெரிவித்துள்ளன.