tamilnadu

img

எழுத்தோடு களப் போராட்டத்தையும் இணைத்தவர் கு.சின்னப்ப பாரதி

சென்னை, ஜூன் 23- இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவர் கு.சின்னப்ப பாரதி என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி நினைவேந்தல் கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  சென்னையில் புதனன்று (ஜூன் 22) நடை பெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,  எழுத்தாளர் fள் பலர் எழுதத் தொடங்கிய பிறகு, பல இலக்கிய நாவல்களை எழுதிய பிறகு இடதுசாரி கட்சிக்குள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள னர். ஆனால் சின்னப்ப பாரதி படிக்கும்போதே மாணவர் சங்கத்திலும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து பல களப் போராட்டங்க ளில் பங்கேற்ற பின்னர்தான் எழுத்துப் பணியை தொடங்கினார். விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய பி.சீனிவாசராவோடு, கோவையில் இருந்து சென்னை வரை நடை பெற்ற பாத யாத்திரையில் தோழர் கு.சி.பா கலந்து கொண்டுள்ளார். 

மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட தோழர் குசிபா-வின் தாகம், சங்கம் நூல்களை தோழர் இஎம்எஸ் படித்துள்ளார். அவர் எழுதிய மதிப்புரையில், தமிழ்நாட்டின் முற்போக்கு கலை இலக்கிய இயக்கத்தின் மிகச்சிறந்த நாயகர்க ளில் கு.சின்னப்பபாரதியும் ஒருவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். கு.சி.பா நாவல்களில் இடம்பெற்றிருந்தது வர்க்கப் போராட்டம்தான். அதேபோல் கு.சி‌.பாவின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிகாசோ, சார்லி சாப்ளின் போன்றவர்கள் எப்படி தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்கினார்களோ, அதுபோல் சின்னப்ப பாரதி தான் தேர்ந்தெடுத்த எழுத்துப் பணியில் சிறந்து விளங்கியவர், சாதனை படைத்தவர்.  இலக்கிய உலகத்தில், படைப்புலகத்தில் தனி முத்திரை பதித்தவர் குசிபா என்று புகழாரம் சூட்டினார் சி.மகேந்திரன். தாமரை இதழின் ஆசிரியர் சி.மகேந்திரன் பேசுகையில், சமூகத்தில் நிலவும் பிரச்சனைக ளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று எழுத்தா ளர்களுக்கு ஆழ்ந்த லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தோடு பயணித்தவர் கு.சி.பா. தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் வைத்த கோரிக்கைகளும், திட்டங்களும்தான். கு.சி.பா எழுத்தாளராக மட்டுமல்லாமல் செயல் பாட்டாளராகவும் திகழ்ந்தார், அமைப்பு ரீதியாக வும் செயல்பட்டார். குசிபா எழுத்து பணியோடு நின்று விடாமல் மக்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டார்.

தாமரை இதழின் ஆசிரியர் சி.மகேந்திரன் பேசுகையில், சமூகத்தில் நிலவும் பிரச்சனைக ளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று எழுத்தா ளர்களுக்கு ஆழ்ந்த லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தோடு பயணித்தவர் கு.சி.பா. தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் வைத்த கோரிக்கைகளும், திட்டங்களும்தான். கு.சி.பா எழுத்தாளராக மட்டுமல்லாமல் செயல் பாட்டாளராகவும் திகழ்ந்தார், அமைப்பு ரீதியாக வும் செயல்பட்டார். குசிபா எழுத்து பணியோடு நின்று விடாமல் மக்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டார். விவசாயிகளின் பிரச்சனைகளை தாகம் நாவல் மூலமும், ஆலை முதலாளிகள் எப்படி கரும்பு விவசாயிகளை சுரண்டுகிறார்கள் என்பதை ‘சர்க்கரை’ நாவல் மூலமும் வெளிக் கொண்டு வந்தார். பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை ‘சங்கம்’ நாவல் மூலம் வெளிப் படுத்தினார். இந்த பிரச்சனைகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியதோடு நின்று விடாமல் அவர்களுக்கான போராட்டத்தையும் முன்னெ டுத்தவர். அவர் முன்னெடுத்த பணிகளை நாமும் முன்னெடுப்போம் என்றார்.

சிகரம் செந்தில்நாதன்

சிகரம் செந்தில்நாதன் பேசுகையில், கொல்லி மலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அங்கு விளையும் பழங்களை விற்பனை செய்ய மலையடிவாரத்தில் உள்ள வாரச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும். இது தான் அவர்களின் வாழ்வாதாரம். மின்விளக்கு வசதி, பேருந்து வசதி கிடையாது. நடந்தே  வந்து பழங்களை விற்றுவிட்டுச் செல்ல வேண்டும். மாலை வரை அவை விற்பனையா காது. மீண்டும் மலைக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால் வியாபாரிகள் கேட்கும் அடிமாட்டு விலைக்கு அவற்றை விற்று விட்டுச் செல்வார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும் என நினைத்த கு.சி.பா, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து விற்றால்தானே அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் கேட்கிறார்கள். மலை மேலே சந்தை இருந்தால், வியாபாரிகள் மலை மேல் வந்து உரிய விலை கொடுத்து பொருட் களை வாங்கிச் செல்வார்கள் என அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார். பின்னர் ஆட்சியர் உதவியுடன் மலை மேல் சந்தை உருவாக்கப்பட்டது என்றார்.

ஆதவன் தீட்சண்யா

தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், குசிபா, தமுஎகச பெயரில் அறக்கட்டளை உருவாக்கி 15 லட்ச ரூபாய் நிதியை வழங்கினார். அந்த நிதியில் இருந்துதான் தொடர்ச்சியாக முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி வரு கிறோம். நாமக்கல் மாவட்டத்தில் தமுஎகச விற்கு என சொந்தமான கட்டடத்தை உருவாக்கி யவர். மாணவர் பிரச்சனைகள் முதல் விவசாயி கள் பிரச்சனை, சமூகப் பிரச்சனை என அனைத்து போராட்ட அனுபவங்களையும் ஒருசேர பெற்றவர். சுரங்க தொழிலாளர்களின் பிரச்சனை களை நேரடியாக களத்திற்கு சென்று அங்கி ருக்கும் மக்களோடு வாழ்ந்து, வாழ்வின் அவலங்களை புரிந்துகொண்டு எழுதியவர். மக்க ளோடு மக்களாக பயணித்தவர். சர்வதேச அளவில் உள்ள எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். களப்போராளி இலக்கியவாதி யாகவும் செயல்பட முடியும் என்று நிரூபித்தவர் கு.சி.பா என புகழாரம் சூட்டினார். இதில் நாடக  இயக்குனர் பிரளயன், கல்வி யாளர் பு.பா.பிரின்ஸ்  கஜேந்திரபாபு, எழுத்தா ளர்கள் மயிலை பாலு, இரா.தெ.முத்து, தி.ராஜேந்திரகுமார், ராஜசங்கீதன், அசோக்சிங், பகத்சிங் கண்ணன், மலர்விழி, மணிநாத், வே.உமாகாந்தன், கரண்கார்க்கி ஆகியோரும் பேசினர்.