tamilnadu

img

பாஜக யார் மீது சவாரி செய்தாலும் வெற்றி பெற முடியாது

சென்னை, மார்ச். 1- ‘பாஜக யார்  மீது சவாரி செய்தா லும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.  மக்கள் விரோத பாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலை வர் தொல்.திருமாவளவன் தலைமை யில் செவ்வாயன்று (பிப். 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய கே.பாலகிருஷ்ணன், “சனாதன அரசி யலை மிகத்தெளிவாக புரிந்து கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால் பாஜகவின் ஆணிவேர் தமிழ்நாட்டில் அறுக்கப்படும் என்பதின் அடையாள மாகவே இந்த  போராட்டம் நடைபெறுகிறது” என்றார். பாஜகவின் மதவெறி, வெறுப்பு அரசியலுக்கு எதிராக தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கு உருவாகியிருக்கும் இந்த மகத்தான மதச்சார்பற்ற கூட்டணிதான் நாட்டிற்கே வழிகாட்டும் கூட்டணியாக உள்ளதால் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்றும் அண்ணாமலை என்ன கூச்சல் போட்டாலும் தமிழ்நாட்டில் எடு படாது. பாஜக யாருடன் கூட்டு சேர்ந்தா லும், யார் மீது ஏறி குதிரை சவாரி  செய்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. அதனால்தான் தமிழ்நாட்டில் ஒரு வெறுப்பு அரசி யலை கட்டவிழ்த்து விடுகிறார்கள். தனிநபர் மீதும், தலைவர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்கள். அம்பேத்கர், திருவள்ளூர், பெரியார், காரல் மார்க்சை விமர்சிக்கிறார்கள்.

காரல் மார்க்ஸ் தத்துவம் இந்தி யாவை சிதைத்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். அதுதான் அவரது வேலையா? என்று கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன், பிறப்பால் மனிதனை தாழ்வுபடுத்தி மேல்சாதி, கீழ்சாதி என்றும் பார்த்தாலே தீட்டு,  தொட்டாலே தீட்டு என்று மனிதனை சீரழித்தது எந்த தத்துவம் என்றும் கேள்வி எழுப்பினார். உண்மையில் இந்தியாவில் சகமனிதனை மனிதனாக  மதிக்காமல் சிதைத்து சிறுமைப் படுத்தியது மநு தர்மம்தான் என்றும் பதிலடி கொடுத்தார். அரசியல் சாசனத்தை, ஜனநாய கத்தை, மாநில உரிமையை பாது காக்க, மதச்சார்பின்மையை பாது காக்க, சிறுபான்மை மக்கள் நிம்மதி யாக வாழ, சமதர்ம சமுதாயம் படைக்க  சாதி, மதம் கடந்து அனைவரும் ஓரணியில் திரண்டு 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

தொல்.திருமாவளவன் பேசுகை யில், “தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட  சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம் ஒழுங்கை  சீர்குலைத்து திமுக அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். பாஜக தலை வர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றது” என்றார். அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக திடீரென பாஜக- ஆர்எஸ்எஸ் காட்டுகிறார்கள். இதை விட அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? தமிழ்நாட்டில் தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலா ளர் மு.வீரபாண்டியன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி  தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செய லாளர் அப்துல் சமது, திராவிடர் விடு தலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்எல்) மாநில செயலா ளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோரும் பேசினர்.