tamilnadu

img

கே.பாலகிருஷ்ணனுக்கு வாச்சாத்தி மக்கள் உற்சாக வரவேற்பு

தருமபுரி, அக்.18- 30 ஆண்டு கால உறுதியான போராட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டிய வாச்சாத்தி கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று நேரில் சென்றார்.  அவருக்கு வாச்சாத்தி மக்கள் பெருந்திரளாகக் கூடி ஆரத்தி எடுத்தும், வெற்றிமுழக்கமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துரையாடினர்.  அப்போது அம்மக்கள் கூறுகையில்,  வாச்சாத்தி வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் நடை பெற்று 30 ஆண்டுகாலமாகிறது. நீதி கிடைத்தும், எங்கள் கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. இக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பொதுக் கழிப்பறை, சமுதாயக் கூடம் ஆகியவைகூட இல்லை. சுடுகாடு கூட பாறைகள் நிறைந்த கரடு, முரடான இடத்தில் உள்ளதால், இறந்தவர்களை புதைப்பதற்கு குழியைக்கூட தோண்ட முடியவில்லை. வாச்சாத்தியில் வீடு கட்ட இடமில்லாததால்,

மல்லன்குட்டை பகுதியில் 70க்கும் மேற்பட்டோர் வீடுகட்டி வசித்து வருகின்ற னர். ஆனால், அந்த இடத்திற்கு மனைப்பட்டா இல்லை. அதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இங்குள்ள மக்கள் கூலி வேலைக்கு வெளியில் செல்லாத வகையில், இங்கேயே சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.  இதனைத்தொடர்ந்து, கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், வாச்சாத்தி வழக்கு தொடர்பான போராட்டத்தில், நீங்கள் உறுதியாக நின்று நீதி யை பெற்றுள்ளீர்கள். எங்கெல்லாம் மக்கள் பாதிக்க ப்படுகிறார்களோ, அங்கு பாதிக்கப்படுபவர்க ளுக்கு ஆதரவாக நின்று குரல் கொடுக்க வேண்டும்.  சாதாரண, ஏழை, விளிம்பு நிலை அடித்தட்டு மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பில் நிறைவேற்ற வேண்டிய அம்சம் குறித்தும், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதி கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தினோம். முதல்வரும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.  இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டப் பொறுப் பாளர்கள் எஸ்.கே.கோவிந்தன், ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (ந.நி.)