tamilnadu

‘சமூக மாற்றத்தை தள்ளிப் போடலாம், தடுக்க முடியாது’

சென்னை, பிப்.22 - “மனித குல வரலாற்றை விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்த மாமேதை கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் சோசலிசம் வந்தே  தீரும் என்று அறிவித்தார்கள். மனித சமு தாயத்தின்  வளர்ச்சியை தள்ளிப்போடுவதற்கு முத லாளித்துவம் அனைத்து தகிடுதத்தங்களையும் செய்யலாம், ஆனால் மாற்றத்தை தடுக்க முடி யாது” என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில், சிறப்புக் கிளைகளின் சார்பில் சிவப்பு புத்தக தின விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு இரா.சிந்தன் தலைமையேற்றார்.  சுதிர் ராஜா வரவேற்புரையாற்றினார். சரவணன், ராம் குமார், நர்மதா தேவி, தங்கராஜ், விஜயலட்சுமி மற்றும் முத்தமிழ் ஆகியோர் ஏங்கெல்ஸ் எழுதிய ‘கற்பனாவாத சோசலிச மும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற புத்தகத்தின் பகுதிகளை வாசித்தார்கள். நூலின் உள்ளட க்கத்தை விளக்கி கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார்.

ஒலி வடிவில் சிவப்பு புத்தகம்

இதனைத் தொடர்ந்து ‘கற்பனாவாத சோச லிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ நூல் தோழர் உ.வாசுகியின் குரல் பதிவாக வெளி யிடப்பட்டது. இதனை மார்க்சிஸ்ட் ஆசிரியர் என்.குணசேகரன் வெளியிட ஆர்.ஜே.பிரசாத் பெற்றுக்கொண்டார். வில்சன் நன்றி கூறினார். இந்த நிகழ்வினை நிறைவு செய்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய தாவது: சிவப்பு புத்தகங்களை எத்தனை விரைவாக வாசிக்கிறோம் என்பதல்ல, நிதானமாக அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதுதான் அவசியம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூலை படித்தால் அதிலும் நாம் கற்பனாவாத சோசலி சத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் அறிந்து கொள்ள முடியும். 1948 ஆம் ஆண்டில் கார்ல்  மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து இந்த புத்தகத்தை எழுதிய பிறகு, அதற்கு எழுதப்பட்ட  முன்னுரையில் ‘சோசலிசம்’ என்ற சொல் எப்படி குழப்பங்களுக்கு மத்தியில் இருந்தது என்பதை விளக்குகிறார். முதலாளித்துவ சமுதாயத்திற்கு எந்த சேதமும் இல்லாமல் சோசலிசத்தை உருவாக்க முடியும் என்றெல்லாம் பலர் நம்பினார்கள். சோசலிசம் என்ற சிந்தனை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்தக் கருத்து கற்பனாவாதமாக இருக்கும்போது நடை முறைக்கு வருவதற்கான சாத்தியம் இல்லை.  எனவேதான் விஞ்ஞானப் பார்வை தேவைப்படு கிறது.

சமுதாய மாற்றத்தை யாராலும் தடுக்கவே முடியாது. ஆளும் வர்க்கங்கள் தங்களுடைய அனைத்து முயற்சிகளையும் செலுத்தி, மாற்றத்தை தள்ளிப்போட முயற்சிக்கக் கூடும்.   கார்ல் மார்க்சும் - ஏங்கெல்சும் முதலாளித்து வத்தின் சகல அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வந்தடைகிறார்கள். இது சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். நிலவுடைமையை வீழ்த்தி, முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பற்றிய காலத்தில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. புரட்சிகர  முழக்கங்களை முன்னெடுத்த முதலாளித்துவ சக்திகள், ஆட்சிக்கு வந்த பின் சுரண்டலை தீவிரப்படுத்தினார்கள். எனவே மக்கள் முதலாளித்துவ அமைப்பையும் மாற்றி அமைக்க  வேண்டும் என விரும்பினார்கள். முதலாளி வர்க்கம், தொழிலாளர்களை சுரண்டித்தான் உயிர் வாழ்கிறது. இப்போதுள்ள அரசு, அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் சுரண்ட லுக்கு சாதகமான கருவியாக இருக்கிறது. சுரண்டல் தொடர்ந்து நடப்பதாலும், தீவிர மடைவதாலும் மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழக்கிறார்கள். எனவே முதலாளித்துவ சமுதா யம் திரும்பத் திரும்ப நெருக்கடிக்கு ஆட்படு கிறது. எனவே, சோசலிசத்தை நோக்கிய பயணம்  இந்த சுரண்டலுக்கு முடிவுகட்டுவதன் மூலமே  சாத்தியம் என்பதை கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் முன்வைத்தார்கள்.

பலரும் முதலாளிகளின் லாபம் சந்தையில் இருந்து உருவாவதாக நினைத்தார்கள். ஆனால், உற்பத்தி இடத்தில்தான் உபரி உருவாகிறது என்பதை தெளிவாக ஆய்வு செய்து முன்வைத்த வர் கார்ல் மார்க்ஸ். உபரி மதிப்பு பற்றிய அவரு டைய இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை ஏங்கெல்ஸ் விளக்குகிறார். இப்போது பொருள் உற்பத்தி சமூகமயமாகி யிருக்கிறது. ஒரு மேசை தயாரித்தால் கூட அதனை ஒரே தனி நபர் செய்ததாக சொல்ல முடியாத அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளும் இணைந்தே உற்பத்தியை மேற்கொள்கிறார்கள். ஆனால் உற்பத்தியின் பலன்கள் அனை வருக்கும் கிடைப்பதாக இல்லை. இந்த இரண்டு போக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. இந்த மோதலுக்கு தீர்வுகாண்பது அவசியம். அதற்கான வழிமுறை, உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதற்கேற்ற அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதும்தான் என்பதை விஞ்ஞான சோசலிசம் விளக்குகிறது” இவ்வாறு அவர் பேசினார். அவரின் உரை பேஸ்புக் நேரலையாக ஒளிபரப்பானது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பார்க்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், ஆர்.பத்ரி, பாரதி புத்தகாலயம் இரா.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.