tamilnadu

img

வருவாய்த்துறை விசாரணையின்றி உடல்களை அகற்றக் கூடாது

சென்னை, மார்ச் 26 - பெண்கள், குழந்தைகளின் அகால, சந்தேக மரணங் களில் வருவாய் துறை விசார ணைக்கு பிறகே காவல்துறை உடல்களை அகற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.பால பாரதி வலியுறுத்தி உள்ளார். சர்வதேச மகளிர் தினத் தையொட்டி சனிக்கிழமை யன்று (மார்ச் 25) தேவநேசன் நகரில் திறந்தவெளி கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில், கே.பாலபாரதி பேசியதன் சுருக்கம் வருமாறு: தமிழகத்தில் உள்ள பெண் மேயர்களை, குறிப்பாக சென்னை மேயரை குறி வைத்து கேலி செய்து சமூக வலைதளங்களில் பதி விடப்படும் பதிவுகள் ஆணாதி க்கத்தின் குரூரத்தை காட்டு கிறது. பெண்கள் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது என்று உலக அளவிலான நிறுவ னங்கள் ஆய்வு செய்து அறிக் கைகளை வெளியிட்டு வரு கின்றன. தனியார் கல்வி நிலை யங்களில் ஏராளமான சந்தேக மரணங்கள் நிகழ்கின்றன. இத்தகைய மரணங்களுக்கு காரணமானவர்கள் அதி காரத்தில், அரசியல் மற்றும் பண பலம் உள்ளவர்களாக உள்ளனர்.  கள்ளக்குறிச்சி பள்ளி, திண்டுக்கல் சக்தி கல்லூரி, ஈஷா மையம் போன்ற  இடங்களில் சந்தேக மர ணங்கள் தொடர்கின்றன.

இந்த மரணங்களுக்கு காவல்துறை பல்வேறு கதை களை எழுதுகின்றன. குழந்தை களின் அகால மரணம், சந்தேக  மரணங்களில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணைக்கு பிறகே காவல்துறை உடலை அகற்ற வேண்டும். கர்நாடகாவில் உடையை வைத்து இஸ்லாமிய பெண்க ளின் கல்வியை மதவாதி கள் பறிக்கின்றனர். ஜென்யு -வில் உணவை வைத்து மாணவிகளை தாக்குகி றார்கள். பெண் உரிமைக்கு எதி ரானவர்கள் மதவாதிகள். மத வாத கொள்கையை பின் பற்றும் பாஜக அரசு, பொருளாதார கொள்கை களிலும் படுதோல்வி அடைந் துள்ளது.

பொதுத்துறைகளை தனி யார்மயமாக்கி வருகிறது. 700 ரயில் பெட்டிகளை தனி யாருக்கு கொடுத்துவிட்டது. தண்டவாளங்கள் தடம்மாறி தனியாரிடம் சென்று கொண்டிருக்கிறது. விமானம், கப்பல் கட்டும்தளம் என பொதுத்துறைகள் வேக வேகமாக தனியாருக்கு விற் கின்றனர். விலைவாசி கட்டுக் கடங்காமல் செல்கிறது. இவற்றிலிருந்து திசை திருப்ப, இந்தி பேசினால் வேலை கிடைக்கும் என்கிறார் கள். ஆனால், இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். இத்த கைய ஏமாற்று பாஜக அரசை 2024 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார். சங்கத்தின் தாம்பரம் பகுதி தலைவர் ஏ.பிரேமாவதி தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சர வணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, துணைத்தலைவர் எஸ். பிச்சையம்மாள், பகுதிச் செயலாளர் ஆர்.விஜயா, நிர்வாகிகள் இ.பிரேமலதா, எஸ்.ஜோதி உள்ளிட்டோர் பேசினர்.