கொச்சி, மே 25 ஜிஷா, உத்ரா, விஸ்மயா போன்ற வன்கொடுமைகளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்ததுபோல் மறுவாழ்வு பெற்றுள்ள நடிகைக்கும் நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். நடிகர் திலீபுக்கு எதிரான, நடிகை பாலியல் வழக்கில் அரசு தரப்பின்மீது அவநம்பிக்கை அளிக்கும் வகையில் திருக்காக்கரை தேர்தல் பிரச்சாரத்தை யுடிஎப் நடத்தி வருகிறது. இதற்கு பதில ளிக்கும் வகையில் முதல்வர் கூறிய தாவது: இந்த வழக்கில் உயர் நிலையில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்ட தன் மூலம் அரசின் நிலைப்பாடு தெளி வாகியுள்ளது. திருக்காக்கரையில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் போது சிலருக்கு கொந்த ளிப்பு ஏற்படுவது இயல்புதான். வழக்கை விசாரிக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் உள்ளது. எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்றாலும் அரசு தடுக்காது. பாதிக் கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று பெண் நீதிபதி, சிறப்பு நீதி மன்றம், அரசு வழக்கறிஞர் யார் வேண்டும் என்பதை முடிவு செய்யும் வாய்ப்பு போன்றவற்றை அரசு வழங்கி யது. இந்த வழக்கு விசாரணை நடை பெற்று வரும் நிலையில் இயக்குநர் பாலச்சந்திர குமார் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இயற்கையாகவே இது ஒரு தீவிரமான விஷயம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மறு விசாரணையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதி மன்றம் குற்றப்பிரிவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. விசாரணைக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இவை அனைத் தும் வழக்கு அதன் வழியில் செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் மேற் கொள்ளப்பட்டது. கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்தவர்கள் இது போன்ற வழக்குகளை நீர்த்துப்போகச் செய்த அனுபவத்தைப் பெற்றிருப்ப தால், இப்போதும் அவ்வாறே நடக் கின்றது என்று கூறினால், அது இந்த அரசுக்கு பொருந்தாது. மக்களை தவறாக வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் யூடிப் தலை மையில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். திருக்காக்கரை மக்கள், கேர ளாவின் பொது வளர்ச்சிக்கு துணை நிற்கும் முடிவுக்கு வந்துள்ளனர் என்று முதல்வர் கூறினார்.