மோடியின் பேச்சு சர்க்கரையாக; தேனாக இனிப்பது போல் உங்களுக்குத் தெரியலாம். மோடி எப்படிப்பட்டவர் என்றால், டீ கேட்டுச் சென்ற ஒருவரிடம் சர்க்கரை அதிகம் போட வேண்டுமா? குறைவாக போட வேண்டுமா? சர்க்கரையே வேண்டாமா? என்றெல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் வெறும் கிளாசை கொடுப்பார். தமிழக அரசு கேட்டதைக் கொடுக்காமல் பட்டை நாமம் போட்டவர்தான் பிரதமர் மோடி. பிரதமர் பெரிய வேடதாரி. அவரிடம் 60 முதல் 70 தலைப்பாகைகள் விதவிதமாக, கலர் கலராக உள்ளது. இவர் லேகியம் விற்கும் வியாபாரியாக மாறிவிட்டார். கடைசியில் லேகியம் கூட கொடுக்கவில்லை. வெறும் சர்க்கரைத் தண்ணீரைக் கொடுத்து ஏமாற்றியவர். மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஐ.லியோனி பிரச்சாரம்