tamilnadu

img

ஜூன் 20 பள்ளிகள் திறப்பு

சென்னை,மார்ச் 2-  தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1  முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 20.6.22 முதல் தொடங்கும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர்,  பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்வுக்காக மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திள்ளார். மன நிறைவோடு தேர்வுகளை எழுத வேண்டும். அடுத்தவர்கள் திருப்திக்காக தேர்வு எழுதுவதை காட்டிலும்  படித்து  தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜூலையில் நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 வரையில் பள்ளிகள் செயல்படும் என்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. எந்தெந்த பாடத்திற்கு எந்தத் தேதியில் தேர்வு நடைபெறும் என்பது குறித்த விரிவான அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்தார். பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு படிப்பதை காட்டிலும் உங்களுக்கு எதில் அதிக திறமை உள்ளது என்பதை நீங்களே உணர்ந்து செயல்பட வேண்டும். தைரியமாக படியுங்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் இருக்கிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.