tamilnadu

img

ஜூலை 9-அகில இந்திய வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம்

ஜூலை 9-அகில இந்திய வேலை நிறுத்த  விளக்க வாயிற் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 2-  மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி பெடரேஷன் சங்க மாவட்டச் செயலாளர் சிவசெல்வம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ஆலயமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்டத் துணைத்தலைவர் எஸ்.கே. செல்வராஜ் ஆகியோர் பேசினர். எம்பிளாயிஸ் பெடரேஷன் சங்கம் செந்தில் நன்றி கூறினார்.