tamilnadu

img

சனாதன அடிப்படையிலான தீர்ப்பு எதிர்க்கப்பட வேண்டும்

சென்னை, ஏப். 2 - திருச்சி வயலூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத் தினார். அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் முறையாக பயின்ற இருவரை வயலூர் சுப்பிரமணியசாமி திருக் கோவில் அர்ச்சகர்களாக அரசு நிய மித்தது. இதனை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, நியமனத்தை ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஏப்.1) வில்லிவாக்கத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட் டக்குழுக்கள் இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அனைத்து சாதியினரையும் அர்ச்ச கராக நியமிக்க வலியுறுத்தி நடக்கும் போராட்டம் நாத்திகர்களுக்கும், நாத் திகர் அல்லாதவர்களுக்கும் இடை யேயான போராட்டமல்ல. அரசியல மைப்பு சட்டத்திற்கும் சனாதனத் திற்கும் இடையே நடக்கும் போராட் டம் இது. ஆகம கோவில்களில், பரம்பரை முறையில்  (பிராமணர்களை மட்டும்) அர்ச்சகர்களை நியமிக்கும் 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 55வது பிரிவை 1970 ஆம் ஆண்டு மு.கருணாநிதி அவர்களின் தலை மையிலான அரசு ரத்து செய்து சட்டம் இயற்றியது.  அனைத்து சாதிகளை சார்ந்த வர்களும் அர்ச்சகராகலாம் என்ப தற்காக இயற்றப்பட்ட சட்டம் இது. இந்த சட்டத்திருத்தத்தின் மீது உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படை யில் அனைத்து சாதிகளை சார்ந்த வர்களை அர்ச்சகராக நியமிக்க முடி யாத நிலைமை ஏற்பட்டது. இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த தந்தை பெரியார் 24.12.1973 அன்று இறந்துவிட்டார். 4.01.1974 அன்று அன்றைய முதல மைச்சர் மு.கருணாநிதி பேசுகிற போது, “அனைத்து சாதிகளை சார்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டுமென்பது பெரி யாரின் உள்ளத்திலே முள்ளாக குத்திக் கொண்டிருந்த பிரச்சனை. அர சாங்கம் சட்டம் இருந்தும் கூட அந்த சட்டம் நிறைவேற்ற முடியாத தயக்கம் இன்றைக்கு ஏற்பட்டிக்கிறது. அவரை அடக்கம் செய்கிற நேரத்தில் கூட அந்த முள்ளை அவர் இதயத் திலிருந்து எடுத்துவிட்டு புதைக்க முடியவில்லையே என்ற வேதனை தான் எனக்குள்ள வேதனை”. என்று கூறியிருந்தார்.

முதன்முதலாக 2017ம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, தலித் மற்றும் பிறப்படுத் தப்பட்ட சாதிகளை சார்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமித்து பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை எடுத்தது. அதன்பிறகு 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு  அரசு அனைத்து சாதியின ரையும் அர்ச்சகர்களாக நியமித்தது. இதன்படி, வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஒரு பிரா மணர், 2 பிராமணர் அல்லாதோர் நேர்முகத் தேர்வு மூலம் அர்ச்சகர் களாக நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து பரம்பரை அர்ச்சகர்களாக பணியாற்றிய குடும்பத்தை சேர்ந்த 2 பேர் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், பிராமணர் அல்லாத 2 பேரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம், மேலும் சாதியின் அடிப்படை யில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தான் வயலூர் கோவிலுக்கு அர்ச்ச கர்கள் நியமிக்கப்பட்டனர். அர்ச்ச கர்கள் நியமனம் ஆகம விதிகளுக்கு புறம்பானது எனக் கூறி இருவரின் நிய மனத்தை நீதிபதி ரத்து செய்து விட்டார். இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் கூட நீதிபதி ஜி.ஆர்.சாமி நாதன் அளித்த தீர்ப்பு சட்டத்திற்கு விரோதமானது. மாநில அரசு நியமித்த மேற்கண்ட இருவரின் நியமனத்தை ரத்து செய்த தோடு, அக்கோவிலில் அர்ச்சகர் களாக இருந்த குடும்பங்களை சார்ந்த இருவரை (இவ்வழக்கில் மனுதாரர் கள்) பரம்பரை அர்ச்சகர் குடும்பங் களை சார்ந்தவர்கள் என்ற அடிப்படை யில் மேற்கண்ட கோவிலுக்கு அர்ச்ச கர்களாக 8 வாரத்திற்குள் நியமிக்க வேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித் துள்ளார்.

தமிழ்நாடு அரசு 1970 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தில் அர்ச்ச கர்களை பரம்பரை முறையில் நிய மனம் செய்ய வகை செய்யும் 1959 வது ஆண்டு சட்டத்தின் 55வது பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. பரம்பரை அடிப்படையில் நிய மனம் செய்யும் சட்டப் பிரிவையே நீக்கிய பிறகு, அதற்கு முரணாக தீர்ப்பு அளித்திருப்பது சட்ட விரோ தம். இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். கரு வறை தீண்டாமைக்கு எதிரான இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். அரசியல் சட்ட விழுமியங்களை தகர்த்து சனாதன முறையில் இந்தி யாவை மாற்றி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. உ.பி.அரசு ராமநவமி கொண்டாட நிதி ஒதுக்குகிறது. மநு நீதி அடிப்படையில் கல்வியை மாற்ற, வரலாற்றை திருத்தி எழுத, பெண் களை அடிமையாக்கிட, சாதிய பாகு பாட்டை தொடர முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டல் படி பாஜக செயல்படுகிறது. இந்த சனாதன சக்தி களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவோம். ஜனநாயகத்தை பாது காப்போம். இவ்வாறு அவர் பேசி னார். இந்தக் கூட்டத்திற்கு முன்னணி யின் மாவட்டத் தலைவர் ஜி.ஆனந்த் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகி வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், முன்னணியின் மாநில துணை தலை வர் க.சுவாமிநாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, விசிக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் தா.பாரிவேந்தன், முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.மதிய ழகன், துணைச் செயலாளர் இ.சாண் டில்யன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.