tamilnadu

img

இந்துத்துவா அபாயத்தை அனைத்து சமூகத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும்

சென்னை, ஏப்.16- இந்துத்துவா அபாயம் குறித்து அனைத்து சமூகத்தினரிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறியுள்ளார். நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் வெளிவந்த கோகுல்ராஜ் ஆண வக்கொலை வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு “புத்தகம் வெளியீட்டு நிகழ்வு” தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் பெரம்பூரில் வெள்ளி யன்று (ஏப். 15) நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.ராஜ்குமார் தலைமை தாங்கினார். புத்தகத்தை முன்னாள் நீதிபதி து. அரிபரந்தாமன் வெளியிட, திரைப்பட இயக்குநர் பொன்வண்ணன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரிபரந்தா மன் பேசியதாவது:

பட்டியலினத்திற்குள்ளேயே நான் உயர்ந்த சாதி, நீ கீழ் சாதி என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் அந்த சமூகத்திற்குள்ளேயே ஆண வப் படுகொலைகள் நடக்கின்றன. இதை இந்துத்துவா சக்திகள் தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு சமூகத்திற்குள்ளேயே நீ பெரியவன், அவன் தாழ்ந்தவன் என்ற பிளவை ஏற்படுத்துகிறார்கள். தீண்டாமை சமூகத்தில் கொடியது, அதைவிட கொடியது பெண்ணடி மைத்தனம். பட்டியல் இனத்திற்குள் ளும் பெண்ணடிமைத் தனம் உள் ளது. உயர்சாதி பெண்களில் இருந்து பட்டியலின பெண்கள் வரை அனை வரும் அடிமைப்படுத்தப்படுகிறார் கள். இவர்களிடத்தில் பெண்ணடி மைத்தனத்திற்கு எதிரான விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

தமிழகத்தில் பாஜக ஏன் தோற்கிறது?

வட இந்திய மாநிலங்களிலும், ஒன்றிய ஆட்சியிலும் சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் தமி ழகம் உட்பட தென் இந்திய மாநி லங்களில் சமூக நீதி ஓரளவு நிலை நாட்டப்பட்டுள்ளது. இதனால்தான் பாஜக பெரியளவில் தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை. கண் ணகி - முருகேசன் வழக்கில் அந்த குடும்பத்தை பட்டியலின சமூகமே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது. அதற்கு காரணம் ஆதிக்க சக்திகளி டம் பட்டியலின மக்கள் இன்றும் அடி மைப்பட்டுக் கிடப்பதுதான். இந்த சமூகத்தில் சாதி மூர்க்கத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்து மதத்திற்குள் ளேயே மற்ற பிரிவினர் தன்னை விட  அவர்கள் தாழ்ந்தவர்கள் என தனது சமூகத்தினரை அணி திரட்டுகிறார் கள். அதனால்தான் சாதியை அழித் தொழிக்க வேண்டும் என்றால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்

என்று அம்பேத்கர் கூறினார்.  சாதியை பாஜக எப்படி கூர்மைப் படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளின் அபாயத்தை அனைத்து சமூக மக்க ளிடமும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. சாதியக் கொடு மைகளை அனைத்துப் பகுதி மக்களிட மும் கொண்டு சென்று விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கு தீர்ப்பை சாதியை அழித்தொ ழிப்பதற்கான தளமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அரிபரந்தாமன் பேசி னார். வட இந்திய மாநிலங்களிலும், ஒன்றிய ஆட்சியிலும் சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் தமி ழகம் உட்பட தென் இந்திய மாநி லங்களில் சமூக நீதி ஓரளவு நிலை நாட்டப்பட்டுள்ளது. இதனால்தான் பாஜக பெரியளவில் தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை. கண் ணகி - முருகேசன் வழக்கில் அந்த குடும்பத்தை பட்டியலின சமூகமே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது. அதற்கு காரணம் ஆதிக்க சக்திகளி டம் பட்டியலின மக்கள் இன்றும் அடி மைப்பட்டுக் கிடப்பதுதான். இந்த சமூகத்தில் சாதி மூர்க்கத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்து மதத்திற்குள் ளேயே மற்ற பிரிவினர் தன்னை விட  அவர்கள் தாழ்ந்தவர்கள் என தனது சமூகத்தினரை அணி திரட்டுகிறார் கள். அதனால்தான் சாதியை அழித் தொழிக்க வேண்டும் என்றால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.  சாதியை பாஜக எப்படி கூர்மைப் படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளின் அபாயத்தை அனைத்து சமூக மக்க ளிடமும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. சாதியக் கொடு மைகளை அனைத்துப் பகுதி மக்களிட மும் கொண்டு சென்று விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கு தீர்ப்பை சாதியை அழித்தொ ழிப்பதற்கான தளமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அரிபரந்தாமன் பேசி னார். 

இயக்குநர் பொன் வண்ணன்

திரைப்பட இயக்குநர் பொன்வண் ணன் பேசுகையில், படித்தவர்கள் தான் இன்று சாதி குறித்தும், மதம்  குறித்தும் பேசுகிறார்கள். படிப்பு மனிதகுல மேம்பாட்டிற்காக, ஒடுக்கப் பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பயன்பட வேண்டுமே தவிர மக்க ளுக்குள்ளே பிளவை ஏற்படுத்துவ தற்கல்ல. மனித குலத்தை மேம் படுத்தாத படிப்பு என்ன படிப்பு என கேள்வி எழுப்பினார். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு கோகுல்ராஜ் வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. அந்த தீர்ப்பு அப்படியே இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்த புத்தகம் அனைத்துப் பகுதி மக்களிடமும் சென்றடைய வேண்டும். குறிப்பாக திரைத்துறையினரிடமும் சென்ற டைய வேண்டும். ஏனென்றால் சினிமா துறையில் இருப்பவர்கள், சினிமா என்ற போர்வையில் உண்மைக்குப் புறம்பான, உண்மைத் தன்மையை நோக்கி நகராமல் இருக்கிறார்கள். இந்த புத்தகம் வளரும் வழக்கறி ஞர்களுக்கும், இளைய தலைமுறை களுக்கும் மிகப்பெரிய பேருதவியாக இருக்கும் என்றார்.

வழக்கறிஞர் ப.பா.மோகன்

வழக்கறிஞர் ப.பா.மோகன் பேசு கையில், எனக்கு இந்த வழக்கில் பெரி தும் உதவியது நான் கற்ற மார்க்சிய மும், அம்பேத்கரையும், பெரியாரை யும் உள்வாங்கியதுதான். இந்த வெற்றி எனது தனிப்பட்ட உழைப் புக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல, கூட்டு உழைப்பின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்தது என்றார்.

கே.சாமுவேல் ராஜ்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் பேசுகையில், கோகுல் ராஜ் வழக்கில் வந்த தீர்ப்பை தலித் அல்லாத பிற மக்களும் வரவேற்கி றார்கள், கொண்டாடுகிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தவிர அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் தீண்டா மைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்கள். தீண்டாமைக்கு எதிராக தனி சிறப்புச் சட்டம் இயற்றுவதும், சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாது காப்பு வழங்குவதும் அரசின் கடமை என்று சுட்டிக்காட்டினார். ஏனென்றால் மதரீதியாக திரட்டு வதை விட சாதி ரீதியாக திரட்டுவது எளிது என பாஜக நினைக்கிறது. அத னால்தான் சாதியத் திரட்டலுக்கு பாஜக பல கோடி ரூபாயை செல வழிக்கிறது. அனைத்து உயர் வகுப்பி னருக்கான கட்சி அல்ல பாஜக, ஒரு  சில உயர் வகுப்பினருக்கான கட்சி  பாஜக என அம்பலப்படுத்த வே டிய கடமை நம்முன் உள்ளது என்றார்.

முன்னதாக வீ.ஆனந்தன் வர வேற்றார். மாவட்ட துணைத் தலை வர் எஸ்.ராணி நன்றி கூறினார். இதில் மாநில துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.கே.மகேந்திரன், வட சென்னை மாவட்டத் தலைவர் மா. பூபாலன், மாவட்டச் செயலாளர் வி. ஜானகிராமன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சரவண தமி ழன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம். நிதிஷ்குமார், சென்னை மாநக ராட்சி 4ஆவது வார்டு கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் தென் மண்டல  துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், கே.ராஜேந்திரன் (இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு) உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.