சென்னை,பிப்.25- பத்திரிகையாளர்கள் நலவாரியத்தி ற்கு, அலுவல்சாரா உறுப்பினர்களாக பத்திரிகையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ் நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டி.யூ.ஜெ) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக அரசு, கடந்த ஆண்டு 6.9.2021 அன்று நடைபெற்ற நிதிநிலை மானிய கோரிக்கையின் போது, “பத்திரிகையாளர்க ளுக்கு நலவாரியம் அமைத்து, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட் டங்களையும் ஒருங்கிணைத்து செயல் படுத்தவும்,நலவாரிய உதவித்தொகை கள், நலத்திட்ட உதவிகளை வழங்க நலவரியம் அமைக்கப்படும்.” என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, கடந்த 1.12.2021அன்று பத்திரிகையாளர் கள் நலவாரியம் அமைத்து, அர சாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் நலவாரிய, தலைவர், அலுவல்சார் உறுப்பினர்கள் 7 பேர்கள், மற்றும் அலுவல்சாரா உறுப் பினர்கள் 6 பேர் என 23 ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்றை (நிலை எண்18) பிப்ரவரி 24 அன்று வெளியிட்டுள்ளது. அதில் அலுவல்சாரா உறுப்பினர் கள் 6 பேர்களை அரசு நியமித்துள்ளது. இதில் 2 பத்திரிகை நிர்வாகத் தரப்பினர். மீதி 4 பேர்கள் பத்திரிகையாளர்கள். ஏற்க னவே அரசு அறிவித்து ,நடைமுறைப் படுத்திவரும் நலவாரியங்களில், அலுவல் சாரா உறுப்பினர்களாக, தொழிற்சங்க தலைவர்கள் நியமிக் கப்பட்டிருக்கும் போது,இதில் பத்திரி கையாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் இல்லாதது, பத்திரிகையாளர்களின் நலன்களை புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.
எனவே, செய்தித்துறை அமைச்சர் உடனடியாக, இப்பிரச்சனையில் தலை யிட்டு,களப்பணியில் ஈடுபட்டு வரும் அனுபவம் வாய்ந்த, தொழிற்சங்க அனு பவம் உள்ள தேவையான பிரதிநிதி களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், ஓய்வூதியக்குழு,அங்கீகார அட்டை வழங்கும் குழு ஆகியவற்றிலும் ஏற்கனவே இருந்ததைப் போன்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு பிரதி நிதித்துவம் அளித்து தனித்துவம் வாய்ந்த தனித்தனி குழுவாக செயல்பட வேண்டும். ஓய்வூதியம் மற்றும் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் குழுவில் பத்திரிகை,முதலாளி-தொழிலாளிகளை (பத்திரிகையாளர்கள்) ஒருங்கிணைத்து ள்ளது எதற்காக என்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கு அரசுதான் விளக்கம் தர வேண்டும். ஓய்வூதியம் பெற விண்ணப்பித்து, காத்திருப்போர் நூற்றுக்கணக்கில் உள் ளார்கள். சிலர் ஓய்வூதியம் பெறாம லேயே இறந்தும் போய்விட்டார்கள். அப்படி இருக்கும்போது,பத்திரிகை முதலாளி ஓய்வூதியக்குழுவில் என்ன அலுவல் செய்யப்போகிறார்? எனவே ஏற்கனவே இருந்ததை போல, தனித்தனிக் குழுக்களை அரசு ஏற்படுத்த வேண்டும்; நலவாரியத்தில் பத்திரிகையாளர்கள் சேர என்ன தகுதி வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.