விழுப்புரம், மார்ச் 25- விழுப்புரம் மாவட் டத்தை சேர்ந்த 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் அகில இந்திய விவசாய தொ ழிலாளர்கள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் விழுப்புரம் மாவட்டம், அர கண்டநல்லூரில் நடை பெற்றது. கண்டாச்சிபுரம் வட்டத் தலைவர் எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கி னார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் கலந்து கொண்டார். விழுப்பு ரம் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி,சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.குமார், கண்டாச்சி புரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கணபதி உள்ளிட்ட பலர் பேசினர். கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட கொல்லூர், நாயனூர், சித்தாம்பூர், அருமலை, ஏமாத்தூர் உள்ளிட்ட 21 கிராமங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் தங்களை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.