ஜப்பான் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் வேலை
சென்னை, ஜூன் 14 - சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒருமுறை தங்களின் திறமையை நிரூபித்துள்ள னர். ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான த்ரேடு வேவ் கார்ப்பரேஷன் மற்றும் கொஹானி சிக்கை ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 72 மாணவர் களுக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில் துறை ஒத்துழைப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சுமார் 450 மாணவர்கள் இந்த வேலைவாய்ப்பு செயல்முறையில் பங்கேற்றனர். கடுமையான விண்ணப்பச் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்ப நேர்காணல்கள் என பல சுற்றுகளுக்குப் பிறகு 72 திறமை யான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் 62 பேர் த்ரேடு வேவ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மென்பொருள் பொறியா ளர்களாக செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுத் துறையில் பணியாற்றவுள்ளனர். மீதமுள்ள 10 மாணவர்கள் கொ ஹானி சிக்கை நிறுவனத்தில் உற்பத்தி தொழில்நுட்பம், எந்திர வியல் மற்றும் தயாரிப்பு ஆய்வுத் துறைகளில் தொழில் நுட்பப் பொறியாளர்களாகப் பணிபுரியவுள்ளனர்.