சென்னை,ஜன.1- தமிழக சட்டமன்றக்கூட்டத்தொடர் ஜனவரி 5 அன்று துவங்குகிறது என்று ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. ஜனவரி 5 அன்று காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரை யுடன் துவங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.