மாநாட்டை வாழ்த்தி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் சாராம்சம் வருமாறு: ஒரு சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். சனாத னத்தை ஒழிப்பதே முதல் பணி. சனாதனம், சமத்து வத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் மாற்ற முடியாதது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என்ப தற்காகத்தான் கம்யூனிச இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும். ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனாதனம், சனா தனம்னு குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. பள்ளிகளில் காலை உணவு போடுவதால் கக்கூஸ் நிரம்பி வழியு துனு ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிடுகிறது. தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனா தனக் கருத்துகளை திணிக்கத் தான் பயன்படுத் தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்க மும் தோன்றிய பிறகு தான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கானதாக மாறியது. பசியால் யாரும் வாடக் கூடாது என்று வள்ளலார் வடலூரில் அணையா அடுப்பை பற்ற வைத்தார். அந்த அடுப்பு இன்றும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கு. அந்த அடுப்புல இருந்து நெருப்பு எடுத்து பற்ற வைத்து, பள்ளிக் கூடங்களில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி உள்ளார்.
மக்களை சாதியாகப் பிரித்து, தனித்தனியா இருக்கணும்னு சொல்றதுதான் சனாதனம். அனை த்து சமூக மக்களையும் ஒரே இடத்துல குடி வைத்து, அந்த இடத்துக்கு சமத்துவபுரம்னு கலைஞர் பெயர் வைத்தார். சனாதனத்துக்கு சம்மட்டி அடி கொடுத் தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போதுள்ள முதல்வர், அர்ச்சகராக பணி ஆணை வழங்கினார். வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என்று பெண்களை சனாதனம் அடிமைப்படுத்தியது. கண வனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன் கட்டை ஏற வைத்தது. இன்றைய திமுக அரசு கட்ட ணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்ற வற்றை செயல்படுத்தி வருகிறது. மணிப்பூர் மாநிலத்தை பாஜக ஆளுகிறது. சொந்த மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டிவிட்டிருப்பதுதான் சனாதனம். மேலும், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு விஸ்வகர்மா திட் டத்தை கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி முதலமைச்சர் பதவி விலகி யது போன்று, ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையும்,
நம்முடைய குழந்தைகளை படிக்க வைக்கிற துக்காக திட்டமிடுகையில், குழந்தைகளை படிக்கவிடாமல் தடுக்க பாசிஸ்ட்டுகள் திட்டம் போடு கிறார்கள். அதன் ஒருபகுதிதான் நீட் தேர்வு. இந்த தேர்வுக்கு 21 குழந்தைகளை பறிகொடுத்துள் ளோம். மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவிற்கு முன்னோடியாக உள்ள தமிழகத்தை சீர்குலைக்க நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதற்காக முழுமுயற்சி எடுத்து வருகிறோம். நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதுதான் உண் மையான வெற்றி. சனாதனத்துக்கும் திராவிடத் துக்குமான போர் உச்சத்தில் உள்ள நிலையில் நடை பெறும் இந்த மாநாடு சனாதனிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும். எரியட்டும். மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடந் துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெல் வோம். சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல் லட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய மாநாட் டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சனாதன ஒழிப்புப் போராளிகள் நினைவுச்சுடர் கொண்டு வரப்பட்டது. இந்த சுடர் பெறும் நிகழ்ச்சி க்கு மூத்த தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் தலை மை தாங்கினார். சுடர்களை எஸ்.ஏ.பெருமாள், நா.முத்துநிலவன், மயிலைபாலு, ஆர்.நீலா, பிரளயன், இரா.தெ.முத்து, வசந்தி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து புத்தகக்காட்சி, ஓவியக்காட்சி உள்ளிட்டவைகளை தலைவர்கள் திறந்து வைத்தனர். மாநாட்டின் தொடக்க அமர்வுக்கு வரவேற்புக் குழுத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழுச் செயலா ளர் கா.பிரகதீஸ்வரன் வரவேற்றார். மாநாட்டை வாழ்த்தி மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ச.சிவக்குமார் ஆகி யோர் பேசினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் பேரா.ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.