tamilnadu

img

பேரிடர் காலத்தில் மக்களை காப்பது பொதுத்துறைகள்தான்

கோவை, டிச.31 - பேரிடர் காலத்தில் மக்களை காப்பது பொதுத் துறைகள்தான் என்று கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பெருமிதம் தெரி வித்தார். கோயம்புத்தூர் கோட்டத் தின் ’சிறந்த போஸ்ட்மேன்’ விருது வழங்கும் விழா வியா ழனன்று (டிச.31) கோவையில் நடைபெற்றது. ரோட்டரி 3201 ஏற்பாடு செய்த இவ்விழாவில் பங்கேற்று, 60 அஞ்சல் ஊழி யர்களுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் பேசுகையில், மக்க ளுக்கு பாலமாக இருப்பவர் கள் இந்த அஞ்சல் ஊழியர்கள் தான். அஞ்சல் துறை ஊழியர்க ளின் ஆதங்கத்தை அறிந்து இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார். கொரோனா பேரிடர் காலத்தில் தனியார் துறைகள் ஓடி ஒளிந்த நிலையில், மக்க ளுக்கான சேவையை கொண்டு சேர்க்கும் வகை யில் தங்குதடையின்றி பணி யாற்றியது பொதுத்துறை நிறு வனங்கள்தான். குறிப்பாக, ஏர் இந்தியா, பொதுத்துறை வங்கி கள், அஞ்சல்துறை, அரசு  மருத்துவமனைகள் இவைகள் தான் மக்களுக்கு சேவையாற்றி யது.

ஆகவேதான் பொதுத் துறை நிறுவனங்களை பாது காக்க வேண்டும் என்றும் அவர்  கூறினார். நாடு முழுவதும் 3760 அஞ் சல் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகங்கள் சொந்த  கட்டிடத்தில் செயல்படும் போது வாடகை பணம் பெரிய அளவுக்கு மிச்சமாகும். அந்த பணத்தை இத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அண் மையில் நடைபெற்ற நிலை குழுக் கூட்டத்தில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தொகுதி மேம்பாட்டில் இருந்து ஆண்டுக்கொரு அஞ்சல் அலுவலகத்தை கட்டி கொடுக்க வலியுறுத்தி உள்ளோம்.

இதனை ஏற்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும் வருத்தப்பட்டார். உப்பிலிபாளையம் பகுதி யில் ஒரு அஞ்சல் அலுவல கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தேன். அந்த நிதியை திருப்பி அனுப்பிய சம்பவ மும் நிகழ்ந்தது. மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை, பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் அஞ்சல் அலு வலகங்களின் கோயம்புத்தூர் பிரிவு  மூத்த கண்காணிப்பாளர் கே.கோபாலன், ரோட்டரி ராஜசேகர் சீனிவாசன், நிர்வாகி கள் கணேஷ் குமார்,  எஸ்.சுவாமிநாதன், சாண்டியாகோ ஜேசு,  டாக்டர் மோகன சுந்தரம்,  பாலசுப்ரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.